districts

img

நீர் மேலாண்மை குறித்த அக்கறை அவசியமானது

புதுக்கோட்டை, டிச.1- நீர் மேலாண்மை குறித்த அக்கறை ஒவ்வொரு தனி  மனிதனுக்கும் அவசியமா னது என்றார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் வி.திருவள்ளுவன். முனைவர் ப.மு.நட ராஜன் எழுதிய ‘நீரின்றி அமையாது உலகு - மூன்று சொற்களில் அறிவியல்’ என்ற நூல் வெளியீட்டு விழா  புதுக்கோட்டையை அடுத்த  திருவரங்குளம் புஷ்கரம்  வேளாண் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் நூலை வெளி யிட்டு அவர் பேசுகையில், “நீர் மேலாண்மை குறித்த  இந்தப் புத்தகம் 20 இயல் களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு இய லும் முனைவர் பட்ட ஆய் வுக்கு தகுதியானது. எதார்த்த மான மொழி நடையில் நூலா சிரியர், தான் எடுத்துக்கொண்ட பணியை முழுமையாக நிறைவேற்றி உள்ளார். எழுத்தின் வெற்றி  என்பது அது வாசகனின் உள்ளத்தைத் தைக்க வேண் டும். இந்தப் புத்தகத் தில் உள்ள பல சொல்லா டல்கள் பெரிய இலக்கிய வாதிகளின் எழுத்துக்கு நிக ராக உள்ளது. நீர் மேலாண்மை என்பது  இன்றைக்கு மிகப்பெரும்  சவாலாக உருவெடுத்துள் ளது. இதுகுறித்து ஒவ் வொரு தனி மனிதனும் அக்கறை கொள்ள வேண் டும். நீர் மேலாண்மை குறித்த அக்கறையை ஒவ்வொரு வாசகனிடத்திலும் அழுத்தமாகப் பதிவு செய்யும் இந்தப் புத்தகம் இளைய தலைமுறைக்கு கட்டாயம் கொண்டு செல்லப் பட வேண்டும். குறிப்பாக விவசாயக் கல்லூரி மாண வர்கள் இதைக் படித்து தங்களது ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும்” என்றார். விழாவிற்கு ஆவுடை யார்கோவில் மேனாள் ஊராட்சி ஒன்றியப் பெருந்த லைவர் இரா.துரைமாணிக் கம் தலைமை வகித்தார். இயற்கை விவசாயி ஜி.எஸ்.தனபதி வரவேற்றார். நூலின்  முதல் பிரதியை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியை கவிஞர் தங்கம் மூர்த்தி ஒருங்கிணைத்தார். நூலா சிரியர் ப.மு.நடராஜன், கீதா  நடராஜன் ஆகியோர் ஏற்புரை  வழங்கினர். தென்னை விவ சாயிகள் சங்கத் தலைவர் ப.செல்லத்துரை நன்றி கூறி னார்.