கும்பகோணம், ஜூலை 8- தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தாமோதரன் சனிக்கிழமை உடல்நிலை குறை வால் காலமானார். இதையொட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்ட கிளை சார்பில் கும்ப கோணம் கால்நடை மருத்துவமனையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க கும்ப கோணம் வட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க மாநிலச் செயலாளர் தமிழ்வாணன், தமிழ்நாடு அமைச்சுப் பணியா ளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் செல்வமணி, தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர் சங்கம் வட்டச் செயலாளர் பிரகாஷ், கால்நடை பராமரிப்பு உதவி யாளர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் காமராஜ், அரசு ஊழியர் சங்க கும்பகோணம் வட்டச் செயலாளர் வெங்கடேசன் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட இணைச் செய லாளர் சாரங்கன் உள்ளிட்ட அரசு ஊழி யர்கள் இரங்கல் தெரிவித்தனர்.