தஞ்சாவூர், மே 18-
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் பெரிய கோயில் பகுதியில் புதன்கிழமை கடும் வெயிலின் தாக் கத்தை உணர்த்தும் விதமாக இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார். இதை மற்றொரு இளைஞர் செல் பேசி மூலம் வீடியோ பதிவு செய்தார்.
இந்த வீடியோ காட்சி கள் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், ஆபத்தை விளைவிக்கும் விதமாக வாக னத்தை ஓட்டியதாக, இருவர் குறித்து மேற்கு காவல் நிலை யத்தினர், போக்குவரத்து ஒழுங்கு பிரிவினர் விசாரணை நடத்தினர்.
இதில், வாகனத்தை ஓட்டியவர் கீழவாசல் குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த அருணாசலம் (23), இதை வீடியோ எடுத்தவர் குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரசன்னா (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அருணாசலம், பிரசன்னாவுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இருவரை யும், “இதுபோன்று பொது இடங்களில் அச்சுறுத்தும் வகை யில் செயல்படக் கூடாது” என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.