districts

img

புதுச்சேரி விவசாயிகளுக்கு காய்கறி-விதை தொகுப்புகள்

புதுச்சேரி, ஜூலை 29- விவசாயிகளுக்கு ஆடி பருவத்திற்கான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்புகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவ சாயிகள் நலத்துறை. தோட்டக்கலை பிரிவின் மூலம் தோட்டக்கலை பயிர் சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தி திறன் அபிவிருத்தி நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது. புதுவை பகுதியில் உள்ள நகரம் மற்றும் கிராமப்புற மக்களுக்கு தேவையான பசுமையான மற்றும் தரமான காய்கறி களை அவர்களின் வீட்டுப் புழக்கடை மற்றும் மாடி யில் தாங்களாகவே சாகு படி செய்வதை ஊக்கப் படுத்தும் வகையில், ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைக்க ரூ. 200 மதிப்புள்ள காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு நடப்பு  ஆண்டுக்கான ஆடி பருவத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. சட்டப்பேரவை வளா கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பயனாளிகளுக்கு காய்கறிகள் விதை பை களை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார்,வேளாண் துறை இயக்குநர் வசந்த குமார், கூடுதல் வேளாண் தோட்டக்கலை இயக்குநர் ஜாகிர் உசேன், மற்றும் சண்முகவேலு உள்ளிட்ட வேளாண் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் திரளாக   நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.