districts

தேர்தல் பணியின்போது மண்டல உதவி அலுவலரை தாக்கிய விஏஓ சஸ்பெண்ட்

சிவகங்கை, மே 5- தேர்தல் பணியின்போது மண்டல உதவி அலுவலரை தாக்கிய திருப்பு வனம் வட்டம், மாங்குடி கிராம நிர்வாக  அலுவலரான (விஏஓ) அன்புச்செல்வன் என்பவரை சிவகங்கை மாவட்ட ஆட்சி யர் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தர விட்டுள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில், மானாமதுரை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பு வனம் அருகில் உள்ள மாங்குடி கிராம  வாக்குச்சாவடியில் இரவு 10 மணியள வில்,  வாக்குப்பதிவு இயந்திரங்களை யும், தேர்தல் ஆவணங்களையும் சேக ரிப்பதற்கு மண்டல அலுவலர் குழு சென்றுள்ளது. அப்போது குழுவில் இடம் பெற்றி ருந்த உதவி மண்டல அலுவலர் முத்து முருகனை கிராம நிர்வாக அலுவலர் அன்புச்செல்வன் முன் விரோதத்தின் காரணமாக தனது ஆதரவாளர்கள் 15 பேரை முன்கூட்டியே வரவழைத்து வைத்துக் கொண்டு,அவரை கடுமை யாக தாக்கியுள்ளார். அத்துடன் வாக்குப்பதிவு இயந்தி ரங்களையும், தேர்தல் பொருட்களை யும் சட்டவிரோதமாக ஒன்றரை மணி நேரம் தடுத்து நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்தனர். சிவகங்கை வருவாய் கோட்டாட்சி யரும் விரிவான விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்  பித்தார். அந்த அறிக்கையின் அடிப்ப டையில் கிராம நிர்வாக அலுவலர் அன்புச்செல்வனை தற்காலிக பணி நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநி லச் செயலாளர் தமிழரசன் கூறுகை யில், இந்த தாக்குதலில் ஈடுபட்ட 15-க்கும் மேற்பட்ட சமூக விரோதிகளை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னார்.