districts

img

தமிழ் பல்கலை. துணைவேந்தருக்கு ‘வள்ளலார் விருது’ வழங்கல்

தஞ்சாவூர், நவ.15 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்க லைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையம், சென்னை, அனைத்திந் தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், தஞ்சாவூர் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை இணைந்து, அருட்  பிரகாச வள்ளலாரின் 200 ஆவது  பிறந்த நாள் பெருமங்கல விழாவில், “வள்ளலார் காட்டும் வாழ்வியல் நெறி” என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம், தமிழ்ப் பல்க லைக்கழகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, தமிழ்ப் பல்க லைக்கழக துணைவேந்தர் பேரா சிரியர் முனைவர் வி.திருவள்ளு வன் தலைமை வகித்தார். தமிழ்  நாடு ஆசிரியர் கல்வியியல் பல்க லைக்கழக துணைவேந்தர், பேரா சிரியர் முனைவர் ந.பஞ்சநாதம் சிறப்புரையாற்றினார். கலைப்புல முதன்மையர் முனைவர் பெ.  இளையாப்பிள்ளை, அருட் பெருஞ்ஜோதி அறக்கட்டளை பா.தம்பையா, டாக்டர் பி.கி.சிவ ராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். வள்ளலார் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகளை மையமாகக் கொண்டு அறிஞர் பெருமக்கள் பல்வேறு தலைப்புகளில் உரை யாற்றினர். இவ்விழாவில், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்த ருக்கு வள்ளலார் விருது வழங் கப்பட்டது. முன்னதாக தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குநர் முனைவர் க. திலகவதி வரவேற்றார். அனைத்  திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க தலைவர் முனைவர் கோ. பெரிய ண்ணன் நன்றி கூறினார்.