திருச்சிராப்பள்ளி, ஆக.9-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்டம் லால்குடி வட்ட பிரதிநிதித்துவ பேரவை செவ்வாயன்று நடந்தது. கூட்டத்திற்கு வட்டக் கிளை தலைவர் பேர்னத்மேரி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பால்பாண்டி துவக்க உரையாற்றினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் வாழ்த்துரை வழங்கி னார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழி யர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும். சரண் விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும். 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி நிறைவுரை யாற்றினார். முன்னதாக வட்டக் கிளை இணைச் செய லாளர் இளங்கோவன் வரவேற்றார். மலர்மன்னன் நன்றி கூறினார்.