districts

img

அரசுப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி

பெரம்பலூர், பிப்.15-  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழ் கூடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் பெரியசாமி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, நெற்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் செ. சுதா கலந்துகொண்டு, தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் மாணவர்களின் எதிர்கால நோக்கம், லட்சியம் அதை அடைவதற்கான வழிமுறைகளை குறித்து சிறப்புரையாற்றினார். முதுகலை தமிழ் ஆசிரியர் முருகேசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.