பெரம்பலூர், அக்.13 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பெரம்ப லூர் மாவட்டம் குன்னம் வட்டக்குழு 9 வது ஒன்றிய மாநாடு குன்னத்தில் நடை பெற்றது. வட்டக் குழு உறுப்பினர் அறிவழகன் தலைமை வகித்தார். இளையபெரு மாள் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். வட்டக் குழு உறுப் பினர் ஜெய்சங்கர் வர வேற்றார். மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரு மான சாமி.நடராஜன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநாட்டில், குன்னம் வட்டச் செயலாளராக வி. செல்லமுத்து மற்றும் வட்டக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் பெ. ரமேஷ் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வாழ்த்து ரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. கே.ராஜேந்திரன் நிறை வுரையாற்றினார். வட்டக் குழு உறுப்பினர் சத்திய சீலன் நன்றி கூறினார். குன்னத்தில் போக்கு வரத்து கழக பணிமனை துவங்கப்பட்டு இயங்கா மல் உள்ளது. எனவே தமிழக அரசு, பேருந்துகளை ஒதுக் கீடு செய்து, அலுவலர்கள், கிளை மேலாளர் மற்றும் இயக்குநர்கள், பழுது பார்க்கும் இன்ஜினியர்களை அமர்த்தி பணிமனையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு பொருளா தார மண்டலத்தை செயல்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.