districts

img

சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், செப் 23 - மாநில நெடுஞ்சாலை ஆணை யம் அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்க ளில் ஈடுபட்டனர்.  மாநில நெடுஞ்சாலை ஆணை யம் அமைப்பதால் 4000-ம் மேற்பட்ட பணியிடங்கள் ஒழிக்கப்படும். கிரா மப்புற இளைஞர்களுக்குகான வேலை வாய்ப்பு பறிபோகும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்கால மாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சங்ககிரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சங்ககிரி உட் கோட்டத் தலைவர் எஸ்.தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், கோட்டத் தலைவர் மு.தங்க ராசு, உட்கோட்டச் செயலாளர் ஆர்.அன்பு மற்றும் நிர்வாகி கள் வெ.சீனிவாசன்,  தா.கலைவா ணன் அந்தோணி உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், ஜி. பழனிவேல் நன்றி கூறினார்.  கோவை இதேபோன்று, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் கிணத்துக் கடவு உட்கோட்டம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உட் கோட்டப் பொருளாளர் கிருஷ்ண சாமி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ், உட்கோட்டச் செயலாளர் அம் மாசை,  தலைவர் பாலசுப்பிரம ணியம், பொள்ளாச்சி கோட்டச் செயலாளர் ச.ஜெகநாதன் உள்ளிட் டோர் உரையாற்றிறனர். முடிவில், ஆறுச்சாமி நன்றி கூறினார். இதை போன்று பொள்ளாச்சி கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உட்கோட்டத் தலைவர் என்.அய்யாசாமி  தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெகநாதன். சாலைப்பணியாளர் சங்க கோட்டத் தலைவர் எம்.வெற்றிவேல், எம்.சண்முகவேல் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.  ஈரோடு தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில்  நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம், கோபி உதவிகோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உட்கோட்டத் தலைவர் பழனி வேலு தலைமை வகித்தார். இதில், உட்கோட்டச் செயலாளர் கதிரவன், கோட்டச் செயலாளர் கருப்புசாமி, பொருளாளர் வெள்ளியங்கிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஈரோடு உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு எம்.ஆர்.செங்கோட்டையன் தலைமை வகித்தார். திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.