மயிலாடுதுறை, நவ.25 - நவம்பர் 7 அன்று வெளியிட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அக்ரிகேட்டர் விதிகளை உடனடியாக வகுக்க வேண்டும். ஆன்-லைன் அபராதத்தை கைவிட வேண்டும். ஆர்டிஓ காவல் துறை மாமூலை கட்டுப்படுத்த வேண்டும். செயலி (APP) சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கார், வேன், ஆட்டோ ஓட்டு நர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவல கம் முன்பு மாவட்டத் தலைவர் எஸ்.என். ட்டீ ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பி னர் எம்.கண்ணன், மாவட்டச் செயலா ளர் ப.மாரியப்பன், மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன் மற்றும் சங்க பொறுப்பா ளர்கள் உரையாற்றினர். அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சாலை போக்குவரத்து மாவட்டத் தலைவர் ரத்தினவேல் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் முகமதலி ஜின்னா, சிஐடியு நிர்வாகிகள் வழக்கறிஞர் அலாவுதீன், சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றி னர்.