districts

img

சாலை விபத்தில் தோழர் செந்தில் அகால மரணம்

திருவாரூர், மே 29 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் மகாதேவப்பட்டினம் கிளைச் செயலாளரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினருமான தோழர் ஆர்.செந்தில் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். செவ்வாய்க்கிழமை இரவு பட்டுக் கோட்டை சென்றுவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் மகாதேவப்பட்டினம் வரும் போது நிகழ்ந்த சாலை விபத்தில் பலி யானார். விபத்தில் காலமான செந்தில் உடல்,  பட்டுக்கோட்டை மருத்துவமனையில் உடற் கூறாய்வு செய்யப்பட்டு, பின் புதன்கிழமை மகாதேவப்பட்டினத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.  இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட  செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி ஆகி யோர் அன்னாரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.  மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு.பிர காஷ், ஒன்றியச் செயலாளர் ஜெயபால், நகரச்  செயலாளர் ஜி.தாயுமானவன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ரகுபதி, வாலி பர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எம்.டி. கேசவராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.