districts

திருச்சி முக்கிய செய்திகள்

சிபிஎம் நிதி வசூல் 

தஞ்சாவூர், ஜன.19-  தஞ்சாவூர் மாவட்டம்  பூதலூர் வடக்கு ஒன்றி யம், முல்லைக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி வசூல் ஒன்றியக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் எம்.கே. சேகர் தலைமையில் நடை பெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, ஒன்றியக்குழு செயலா ளர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் பி.முருகே சன் மற்றும் கிளை உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.

ஜன.24-இல்  விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

அரியலூர்,ஜன.19- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஜன.24 அன்று காலை 10.30  மணியளவில் விவசாயி கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு தங்கள் விவசா யம் சார்ந்த குறைகளை  தெரிவித்து பயனடைய லாம் என ஆட்சியர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி

அரியலூர், ஜன.19 - அரியலூர் மாவட்டம்  திருமானூர் அருகே யுள்ள கீழக்காவட்டாங் குறிச்சி அரசு மேல்நிலைப்  பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அப் பள்ளி தலைமை ஆசிரி யர் மே.குமணன் தலைமை வகித்தார். கவி ஞர் சிவ.விஜயபாரதி, ‘மாணவர்கள் மாண்பு மிக்கவர்களே’ எனும் தலைப்பில் பேசினார். இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு சிறு கதைப் பயிலரங்கம் நடத்தப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்ன தாக உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். முது கலைத் தமிழாசிரியர் பி. ஜெயப்பிரியா நன்றி தெரி வித்தார்.

இடிந்து விழுந்த அங்காடி கான்கிரீட்

பாபநாசம், ஜன.19 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே ஆதனூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் அங்காடி கட்டட பணிகள் நடந்து வரு கின்றன. கட்டடத்தின் மேற் கூரைக்கான கான்கிரீட் வேலை நடந்த நிலை யில், அது பெயர்ந்து விழுந் தது. ஆட்கள் யாரும்  இல்லாததால் அசம்பா விதம் ஏதும் நிகழவில்லை.  தரமற்ற வாய்க்கால், குளத்து மணலைப் பன் படுத்தியதால்தான் கான் கிரீட் கீழே விழுந்தது என  அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தரமின்றி கட்டிய கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சுகாதாரமற்ற நிலையில் வரும் குடிநீர்:  கீழத்தெரு மக்கள் சாலை மறியல்

அரியலூர், ஜன.19- ஜெயங்கொண்டம் அருகே சுகாதாரமற்ற குடிநீர் வருவதை  கண்டித்து, ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு  கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட் பட்ட 18 ஆவது வார்டு கீழத்தெருவில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 3  மாதமாக கலங்கிய நீருடன் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக் கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொற்று நோய்க்கு ஆளாகி மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.  இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடமும் மனுக்கள் மூலமாக தெரியப் படுத்தியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் வழக்கம் போல் வெள்ளியன்றும் சுகா தாரமற்ற நிலையில் குடிநீர் வந்துள்ளது.  இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், சுகாதார மற்ற குடிநீருடன் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரி கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், ஜெயங்கொண்டம்  - விருத்தாச்சலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  தகவலறிந்த வந்த காவல் ஆய்வாளர் ராமராஜன், நகர் மன்றத் தலைவர் சுமதி சிவகுமார், கவுன்சிலர் கிருபாநிதி,  நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி ஆகியோர் பொதுமக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில் கலைந்து சென்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு  வீடு கட்ட மானியத்தில் கடன் 

தஞ்சாவூர், ஜன.19-  மாற்றுத் திறனாளிகள் வீடு கட்டுவதற்கு மானியத்தில் கடனு தவி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,  வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு  வாரியம் ஆகிய அலுவலகங்கள் வாயிலாக, அரசால் ஒதுக்கப் படும் வீடு கட்டும் திட்டங்களுக்கு, மாற்றுத்திறனாளி நபர்கள் செலுத்த வேண்டிய பங்கு தொகையினை கட்டிட வசதியாக, மத்திய  கூட்டுறவு வங்கிகளில் பெறப்படும் கடன் தொகையில் அதிகபட்சம்  ரூ.1.50 லட்சம் அல்லது அதற்கு குறைவாக கடன் பெறும் தொகைக்கு  ஏற்றவாறு வட்டித் தொகை மானியமாக வழங்கப்படும்.   மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பெறும் வீட்டுக் கடன் தொகையை தவறாமல் திருப்பி செலுத்தும் மாற்றுத்திறனாளி களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு வட்டித் தொகையை மானியமாக வழங்கலாம். இத்திட்டத்தின் வாயிலாக கடன் உதவி  பெறுவதற்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க  வேண்டும். 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத் திறன் உடைய நபர்கள் தகுதியுடையவர் ஆவர்.  மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, குடும்ப அட்டை பெற்று  இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வட்டியில்லா கடன் தொகை வழங்கலாம்.  இத்திட்டத்தின் மூலம் வங்கி கடன் பெற  விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் பகுதிக்குட்பட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் மேற்கண்ட ஆவணங்க ளுடன் 31.01.2024 அன்றுக்குள் விண்ணப்பித்து பயன்பெறு மாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.

14 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை: பெல் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்

திருச்சிராப்பள்ளி, ஜன.19 - திருச்சி பெல் தொழிற்சா லையில் பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் பல்வேறு பணிகளுக்கு 40 ஆண்டுகளாக சுமார் 2 ஆயி ரம் பேர் வேலை செய்து வந்தனர்.  இந்நிலையில் பணி ஓய்வு, பணியின் போது இறப்பு என பல்வேறு கார ணங்களால், தற்போது 700 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர் களுக்கு பெல் நிர்வாகம் கடந்த 14 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்க வில்லை. பெல் மருத்துவ மனையில் மருத்துவ வசதி வழங்கவில்லை.  மேலும் ராணிப்பேட்டை யில் உள்ள பெல் நிறுவ னத்தில், இடைக்காலத்தில் வழங்கப்பட்ட ரூ. 15 ஆயி ரம் என மாதந்தோறும் வழங்குவது போல், திருச்சி  பெல் நிறுவனமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பில் ஜன.19 அன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டது. இதற்கான கடிதம் கடந்த  ஜன.13 அன்று பெல்  நிர்வாகத்திடம் கொடுக்கப் பட்டது. இந்நிலையில் பெல் நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், வெள்ளிக் கிழமை காலை பெல் மெயின்  கேட் முன்பு போராட்டத்தை துவக்கினர். போராட்டத்திற்கு சிஐ டியு செல்வராஜ், திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் சேகர், அம்பேத்கர் யூனியன் முரு கேசன், ஐஎன்டியுசி சங்க  பூபதி, எம்எல்எப் முருகா னந்தம் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவப் பணி, பாதுகாப்பு பணி தொழிலாளர்களை தவிர  600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இத னால் பெல் நிறுவனத்தின் பல  பிரிவுகளில் வேலை பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.

பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள்

அறந்தாங்கி, ஜன.19 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கியை அடுத்த  மேல்மங்கலம் வடக்கு கிரா மத்தில், பொங்கல் விழாவை  முன்னிட்டு ஆண்டுதோறும் அப்பகுதி இளைஞர்களால் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். அதேபோன்று இந்த ஆண்டும் பல்வேறு  போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகளும் கோப் பைகளும் வழங்கப்பட்டன. மேல்மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா தேவி ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தினகுமார், அறந்தாங்கி நகர்மன்ற உறுப் பினர் சிவபிரகாஷ் , பொது மக்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழா தஞ்சை மாவட்டத்துக்கு  ஜன.30-இல் விடுமுறை

தஞ்சாவூர், ஜன.19-  தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறு ஸ்ரீ தியாகரா ஜர் ஆராதனை விழா இவ்வாண்டு ஜன.26 முதல் 30  வரை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஜன.30  (செவ்வாய்க்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் தஞ்சாவூர்  மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக் கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறி வித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.   மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக  10.02.2024 (சனிக்கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.  இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிவுச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை  கருவூலங்களும் குறிப்பிட்ட பணிகளுடன் இயங்கும் என  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார்.

‘மஞ்சப்பை விருது’ பெற  விண்ணப்பங்கள் வரவேற்பு

கரூர், ஜன.19 - ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான  பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரி யமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த  வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப் படும்.  விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்ச மும், 2 ஆம் பரிசாக ரூ.5 லட்சமும், 3 ஆம் பரிசாக ரூ.3  லட்சமும் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற  ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள்/ கல்லூரிகள்/ வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது கள் வழங்கப்படும்.  இதற்கான விண்ணப்பப் படிவங்களை, மாவட்ட ஆட்சி யர் அலுவலக இணையதளத்தில் (collrkar@nic.in) பதி விறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனி நபர்/ நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள்  இரண்டு மற்றும் குறுவட்டு (CD) பிரதிகள் இரண்டினை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப் பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 1.5.2024 என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

பேராவூரணி ஜேசிஐ  நிர்வாகிகள் பொறுப்பேற்பு

தஞ்சாவூர், ஜன.19-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர வர்த்தகர் கழக  அலுவலகத்தில், வியாழக்கிழமை மாலை ஜேசிஐ பேரா வூரணி சென்ட்ரல் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா நடை பெற்றது.  நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்ற பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், மண்டல தலைவர் ஆர்.ஆர்.அன்பு தனபாலன் ஆகியோர்  பேசினர். நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜி.வெங்கடேசன், கே. நல்லதம்பி ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.  இதில் தலைவராக ச.பார்த்திபன், செயலாளராக இரா. விமல்ராஜ், பொருளாளராக இரா. செந்தில்குமார் ஆகி யோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சிஐடியு ஆலோசனைக் கூட்டம்

அரியலூர், ஜன.19 - அரியலூர் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில், நிர்வாகி கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. கூட்டத்துக்கு, சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய  அரசு கொண்டு வந்த குற்றவியல் சட்டம், மோட்டார் வாகனம் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து, ஜன.23 அன்று அரியலூர் அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என தீர்மானிக்கப்பட்டது.

ஜன.26 தஞ்சையில் டிராக்டர்கள் பேரணி ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு

தஞ்சாவூர், ஜன.19-  பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய  பாஜக அரசின் விவசாய விரோத கொள்கை களுக்கு எதிராக தஞ்சாவூரில் ஜனவரி 26 அன்று டிராக்டர்கள் பேரணி நடத்துவது என  ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்  வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.  இதில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்க வறட்சி பாதித்த பகுதியாக அறி வித்து, நிவாரண நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும். பயிர் காப்பீடு செய்த அனைவருக் கும் இழப்பீடு வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை இரு நூறு நாள்களாக வழங்கி விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டும். ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தியும், ஒன்றிய அரசு கார்ப்பரேட் சார்பு  ஆட்சி நடத்துவது, விவசாயிகள், தொழி லாளர்கள், பொதுமக்களுக்கு எதிரான கொள் கைகளைக் கடைப்பிடிப்பதை கண்டித்தும் ஜனவரி 26 அன்று, குடியரசு தின நிகழ்ச்சி கள் முடிவடைந்த பிறகு தஞ்சாவூரில் டிராக்டர்கள் பேரணி நடத்துவது என முடிவு  செய்யப்பட்டது.   இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப் பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.ராமச்சந்திரன், வடக்கு மாவட்டச் செயலர் சாமு.தர்மரா ஜன், மக்கள் அதிகாரம் தேவா, ஒருங்கி ணைப்புக் குழுவைச் சேர்ந்த எஸ்.ஞான மாணிக்கம், ராஜேந்திரன், கே.தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேங்கைவயல்: விசாரணை ஜன.29-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, ஜன.19 - வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபிசி ஐடி போலீசாரின் மனு மீதான விசாரணை  ஜன.29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பட்டியலின மக்கள் வசிக்கும் குடி யிருப்பின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி யில், மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம்  கடந்த 2022 டிசம்பர் 26 அன்று தெரியவந்தது. இந்த வழக்கை தற்போது விசாரித்து  வரும் சிபிசிஐடி போலீசார், சந்தேகத்துக் குரிய 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை  நடத்த முடிவு செய்து, அதுகுறித்த மனுவை மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும்  இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் 9 பேர் ஆஜராகி யிருந்தனர். ஒருவர் மட்டும் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து ஜன.29 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி எஸ்.ஜெயந்தி ஒத்திவைத்தார். டிஎஸ்பி மீதான புகார் மனு வேங்கைவயல் சம்பவத்தைத் தொ டர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, இறையூர் அய்யனார் கோவிலில் பட்டியலின  மக்களை உள்ளே விட மறுப்பு தெரிவிப்பது மற்றும் தேநீர்க் கடையில் இரட்டை குவளை  முறையை கடைப்பிடிப்பது ஆகிய குற்றச் சாட்டுகளில் இருவர் கைது செய்யப்பட்ட னர். இந்த இரு தனி வழக்குகளை விசாரித்து  வரும் டிஎஸ்பி ராகவி, முறைப்படி சாட்சியங் களை முன்வைத்து புலன் விசாரணை நடத்த வில்லை எனக் குறிப்பிட்டு வேங்கைவயல் பட்டியலின மக்கள் சார்பில் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவர்கள் தரப்பில் வழக்குரைஞர் மலர்மன்னன் ஆஜரா கினார். இவ்வழக்கு விசாரணையை பிப்.1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டார்.