districts

img

தொழிற்சங்க மூத்த தோழர் எஸ்.கணேசன் காலமானார்

திருச்சிராப்பள்ளி, பிப்.5 - ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 1960 ஆம் ஆண்டு முதல் இருந்தவர். கட்சி  1964 இல் பிரிந்த போதிலிருந்து இது வரை பல பொறுப்புகள் வகித்தவர். அகில  இந்திய தபால் தந்தி ஊழியர் தொழிற் சங்க சம்மேளனத்தின் ஒப்பற்ற தலைவ ரும், முதுபெரும் தோழருமான எஸ்.ஜி  என்று போற்றப்பட்டவர் தோழர் கணேசன். பணியில் சேர்ந்த நாள் முதல் தொ ழிற்சங்கத்தில் தீவிரமாக செயல்பட்டு மாநிலம் முழுவதும் தொழிற்சங்க ஊழியர்களை பயிற்று வித்து எண்ணற்ற தொழிற்சங்க தலைவர்களை அஞ்சல்  தந்தி அரங்கில் உருவாக்கியவர். தொழிற்சங்க அரங்கில்  நடைபெற்ற அனைத்து போராட்டங்களிலும் தலைமை யேற்று போராட்டங்களின் வெற்றியை உறுதிப்படுத்தி யுள்ளார். 1960 இல் நடைபெற்ற அகில இந்திய மத்திய அரசு  ஊழியர் வேலைநிறுத்தத்தின் போது கைதாகி சிறை சென்றார். 1968 செப்டம்பர் 19 வேலைநிறுத்தம், 1984  இல் நடைபெற்ற ரயில்வே ஊழியர் போராட்டத்திலும் அப்போது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயலாளராக கலந்து கொண்டார். 19.9.1984 புறநிலை ஊழியர்களுக்காக அஞ்சல் நான்கின் பொதுச் செயலா ளர் தோழர் ஆதிநாராயணா தலைமை யில் நடைபெற்ற ஒருநாள் வேலைநிறுத் தத்தை மாநில ரீதியாகவும் திருச்சி கோட்டத்திலும் செம்மையாக வழி நடத்தி வெற்றி பெறச் செய்தவர்.  இவர் உடல்நலக் குறைவு மற்றும்  வயது மூப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை இயற்கை  எய்தினார். திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது  இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் கணேசன் உட லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு  உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா,  தீக்கதிர் திருச்சி பதிப்பு பொது மேலாளர் பன்னீர் செல்வம், அஞ்சல்  ஓய்வூதியர் சங்க தோழர்கள் சிவசுப்ர மணியன், செல்வன், தண்டபாணி, பிஎஸ்என்எல்இயூ நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.