districts

img

தொழிற்சங்கத் தலைவர்கள் கைது: திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர், செப்.22 - தொழிற்சங்கம் அமைத் திடவும், தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்தி டவும் போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதர வாக தொழிற்சங்கத் தலை வர்கள் போராடினர். இவர் களை கைது செய்த காவல் துறையையும், சாம்சங் நிர்வாகத்தையும் கண்டித்து திருவாரூர் சிஐடியு மாவட்டக் குழு சார்பாக புதிய ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.கே. என்.அனிபா தலைமை வகித்தார். சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், மாநில துணைத் தலைவர் பி. கருப்பையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட பொருளாளர் இரா. மாலதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.