பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை ஆதரித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.