districts

சீருடை பணியாளர் தேர்வாணையம் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு

கரூர், மே 10-

      தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்  சார்பில் மே 12 அன்று தொடங்கப்பட உள்  ளது.  

   இலவச பயிற்சி வகுப்பில் சேரவிரும் பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார்அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.

   மேலும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்க ளின் விவரத்தினை 04324-223555  என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது studycirclekarur@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது கரூர்  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எ ண்அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம்.

   மேலும் https://tamilnadu careerservices.tn.gov.in என்ற இணைய தளத்தில் அனைத்து போட்டித்தேர்வுக் கான காணொலி வழிகற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

   அரசு போட்டித் தேர்வுகளுக்கு மாண வர்கள் தயார் செய்ய ஏதுவாக கல்வி  தொலைக்காட்சியில் போட்டித் தேர்வு களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டு வருகிறது.  

    அத்துடன் ஊக்கஉரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய  கலந்துரையாடல் மற்றும் நடப்புநிகழ்வு கள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 7 மணியிலி ருந்து 9 மணி வரையும் இதன் மறுஒளி பரப்பு பிற்பகல் 7 மணியிலிருந்து 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. இதனை போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.