புதுக்கோட்டை, பிப்.20- புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அண்ணா பண்ணையில் வேலை செய்த விவ சாயத் தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டதால் திங்கள்கிழமையன்று குடியேறும் போராட்டத்தை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வம்பன் பயறு வகை விதை உற்பத்தி பண்ணை, பாட்டுமங்க லம், வல்லத்திராகோட்டை பழம் மற்றும் பலமரக்கன்றுகள் உற்பத்தி பண்ணை, வெள்ளாளவிடுதியில் தேங்காய், கடலை போன்ற எண் ணெய்வித்து மற்றும் விதை உற் பத்தி பண்ணை, குடுமியான்மலை யில் விதை உற்பத்தி பண்ணை என பல அரசுப் பண்ணைகள் பல ஆயி ரம் ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரு கின்றன. இந்தப் பண்ணையில் கடந்த 35, 40 ஆண்டுகளாக அப்பகு தியை சேர்ந்த கிராம மக்களே தினக் கூலிகளாக தோட்ட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், குடுமியான் மலை அண்ணா பண்ணையில் வேலை செய்யும் சுமார் 50 பேருக்கு 60 வயது கடந்துவிட்டதாக கூறி, கடந்த வாரம் வேலையில்லை என்று திருப்பி அனுப்பியுள்ளனர். வேலையிழந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கி யதால் அங்கு வந்த அதிகாரிகள் வேலை கொடுப்பதாக உறுதி கூறி யதையடுத்து போராட்டம் கைவி டபபட்டது. ஆனால் அந்த உறுதி 2 நாள் கூட நீடிக்கவில்லை; மீண்டும் வேலை பறிப்பு செய்யப்பட்டனர்.
வேலையிழந்த பண்ணைத் தொழிலாளர்கள் திங்கள்ளிழமை பாய், தலையணை, அடுப்பு, விறகு, பாத்திரங்களுடன் அண்ணா பண்ணையில் குடியேறியுள்ளனர். எங்கள் உடலில் உழைத்து பிழைக்க தெம்பிருக்கும் வரை வேலை என்ற கோரிக்கை முழக்கங்களுடன் பேர ணியாகச் சென்று இக்குடியேறும் போராட்டத்தை அவர்கள் நடத்தி னர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கூறும்போது, ‘‘தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. உழைக்கும் உடல் திடமும், மனதிட மும் எங்களிடம் உள்ளது. தினக் கூலி ரூ.150-க்கு வேலைக்கு வந்த வர்களுக்கு இப்போது ரூ.420 கிடைக்கிறது. இந்த சம்பளத்தை வைத்து தான் வயதான காலத்தில் வயிறாற சாப்பிடுகிறோம். ஆனால் திடீரென 2004-இல் இயக்குநர் எழுதிய கடிதத்தை காட்டி வேலை களை பறிக்கிறார்கள். இது எங் களை மிகவம் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. வேலையில் சேர்க்கும் போது வயது வரம்பு பற்றி எதுவும் சொல்ல வில்லை. இப்போது பன்னாட்டு நிறு வனங்கள் விதை உற்பத்தியை ஊக்கப்படுத்தி உள்நாட்டு விதை உற்பத்தியை நிறுத்துவதற்காக இந்த வேலை பறிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள். சுமார் 35, 40 ஆண்டுகளாக பண்ணைக்காக உழைத்த எங்க ளுக்கு நிபந்தனையின்றி வேலை கொடுக்க வேண்டும். அல்லது எங்க ளின் பணிக்காலத்தை கணக்கிட்டு பணிக்கொடை வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றனர்.