தஞ்சாவூர், மே 31-
தஞ்சாவூர், மாரிகுளம், செல்வம் நகர் பகுதிகளில் அமைந்துள்ள பாதாளச் சாக்கடை கழிவு நீருந்து நிலை யங்கள் 4 நாட்கள் இயங்காது என்று தஞ்சாவூர் மாநக ராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், ‘‘தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லணை கால்வாய் பாலத்தின் குறுக்கே அமைந்துள்ள பாதாளச் சாக்கடை பிரதான குழாய் பழுதடைந்துள்ளது. பழுதடைந்துள்ள பிர தான குழாயை அகற்றிவிட்டு புதிதாக பிரதான குழாய் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
எனவே, மாரிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதாளச் சாக்கடை கழிவு நீருந்து நிலையம் மற்றும் செல்வம் நகர் பகுதியில் அமைந்துள்ள பாதாளச் சாக்கடை கழிவுநீர் நீருந்து நிலையம் இயங்காது. மேலும் இதனை சரி செய்யும் பணிகள் மே 31 அன்று தொடங்கி ஜூன் 3 வரை நான்கு நாட்கள் மட்டும் பாதாளச் சாக்கடை கழிவுநீர் உந்து நிலையம் இயங்காது. எனவே, இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொருத்துக் கொள்ளவேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.