திருச்சிராப்பள்ளி, ஜன.24- திருச்சி ரயில்வே ஜங்சனில் பய ணச்சீட்டு எடுக்க வருபவர்கள் மற்றும் ஊருக்கு செல்பவர்களை வழியனுப்ப வரு பவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் ஏற்பாடு செய்யாமல் ஆர்பிஎப் காவ லர்கள் மூலம் பொதுமக்களை மிரட்டி வசூல் வேட்டை செய்யும் தென்னக ரயில்வே நிர்வா கத்தை கண்டிக்கிறோம். இருசக்கர வாகன நிறுத்தத்தில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும். அடிக்கடி பழுதாகும் நகரும் படி கட்டுகள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சியில் இருந்து செல்லும் ரயில் களுக்கு விரைவுக் கட்டணம் பெற்றுக் கொண்டு, வெறும் 6 பெட்டிகளில் பொது மக்களை விலங்குகளைப் போல் அடைத்து வைத்து அழைத்து செல்வதை கைவிட வேண்டும். விழாக் காலங்களில் டிக்கெட் கவுண்டர்களின் எண்ணிக்கையை அதி கப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் செவ்வாயன்று ரயில்வே ஜங்சனில் கண் டன ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநகர் மாவட்டத் தலைவர் லெனின் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜித்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் தர்மா, பிரபா கரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வெற்றிச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் பேசி னர். முன்னதாக தென்னக ரயில்வே வணிக மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.