பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
தஞ்சாவூர், ஜூலை 18- பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத் தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் ஆகியோர் தனித்தனியே ரொக்கப் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டி பேசினர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, பொன் காடு அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் திமுக ஒன்றிய செயலாளர் க. அன்பழகன், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், நகரச் செயலாளர்
என்.எஸ்.சேகர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், கல்வித் துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர், பெற் றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விவசாய நிலத்தில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து
அறந்தாங்கி, ஜூலை 18- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா கதி ராமங்கலம் ஊராட்சியில் கொத்தமங்கலம் கிராமத்தில் விவசாய நிலங்களில் மின்சாரக் கம்பங்கள் நடப்பட் டுள்ளன.
இதில் மின்சார கம்பிகள் கையால் எட்டிப் பிடிக்கும் வகையில் தாழ்வாகச்செல்வதால் விவசாயிகள் விவசாய நிலங்களை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளா கின்றனர். மின்சாரத்துறை அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள் வலியுறுத்தியுள்ளனர்.
வயலில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி
பாபநாசம், ஜூலை 18- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த வளத்தாமங்க ளத்தைச் சேர்ந்தவர் நடன சிகாமணி மகன் வெங்கடே சன் (வயது 34). இவர், அதே ஊரைச் சேர்ந்த ஒருவரின் வயலை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த வயலைப் பார்க்க வெங்கடேசன் சென் றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்த வெங்கடேசனை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இது குறித்து பாப நாசம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை நடுவே உள்ள நீர்தேக்கத் தொட்டியை அகற்றக் கோரிக்கை
பாபநாசம், ஜூலை 18- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம் பேட்டை - கணபதி அக்ரஹாரம் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை வழியே திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம் உட்பட கும்ப கோணம் - திருவையாறு சாலையில் உள்ள ஏராளமான கிரா மங்களுக்குச் செல்கின்றனர். இந்தச் சாலையில் காவிரி பாலம் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக சாலை நடுவே மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இத னால் இரவு நேரங்களில் இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இதனால் இடையூ றாக உள்ள மேல் நிலை நீர் தேக்கத் தொட்டியை அப்பு றப்படுத்த வேண்டும். அந்த மேல் நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டில் இருந்தால், வேறு இடத்தில் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டியை கட்டி, அது பயன்பாட் டிற்கு வந்தவுடன், இதை இடிக்க வேண்டும் என்று பொது மக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு
மயிலாடுதுறை, ஜூலை 18- மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களை தேடி உங்கள் ஊர்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மல்லியம், சித்தர்காடு, மயிலாடுதுறை கால்நடை பெருமருந்தகம், அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். மயிலாடுதுறை வட்டம் மல்லியம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, 2 மகளிர் சுய உதவிக்குழுவிற்கு நேரடி கடனாக ரூ.6 இலட்சத்திற்கான காசோலையையும், கறவை மாடு பராமரிப்பு கடனாக 4 நபர்களுக்கு ரூ.1 இலட்சத்து 26 ஆயிரத்திற்கான கடனுதவி களையும், வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் மல்லி யக்கொல்லை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தலா ரூ.9 இலட்சத்து 73 ஆயிரத்து 488 மதிப்பிலான டிராக்டர்களை யும்; வழங்கினார்கள். தொடர்ந்து, மயிலாடுதுறை வட்டம் மல்லியம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர், மல்லியம் கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தை மாவட்ட ஆட்சி யர் நேரில் பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பதனை ஆய்வு செய்தார்.
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் போராட்டம்
திருவாரூர், ஜூலை 18- கலைஞர் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டம்,பிரதம மந்திரி குடி யிருப்பு திட்டம் மற்றும் 100 நாள் வேலை திட்டம் ஆகிய திட்டங்களுக்கு உரிய ஊழி யர்கள் கட்டமைப்பை வழங்க வேண்டும், கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பிரதம மந்திரி வீடு கட் டும் திட்டத்தில் 1,159 வீடுகளுக்கு விடு விக்கப்பட்டுள்ள நிதியினை அரசு அலு வலர்களிடம் திரும்ப வசூல் செய்யும் உத்த ரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தற் செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடை பெற்றது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலகங்களில் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் ஒன் றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் என்.வசந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.எஸ்.செந்தில் மாவட்ட துணைத்தலை வர் மோகன், வட்ட கிளை செயலாளர் ஆனந்த் ஆகியோர் பேசினர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் நடைபெற்ற போராட்டத் தில் 900 பேர் பங்கேற்றனர்.
வெறிநாய்கள் கடித்து 13 ஆடுகள் பலி
கட்டுமாவடியில் பொதுமக்கள் அச்சம்
அறந்தாங்கி, ஜூலை 18- புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி யில் ஒரே நாளில் வெறிநாய்கள் கடித்து 13 ஆடுகள் பலியாகியுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய்களின் கொடூர தாக்குதல்களால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கால் நடைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கின்றனர். சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கட்டுமாவடி பகுதியில் தெரு நாய்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. இத னால் பொதுமக்கள், குழந்தைகள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். சில தினங்க ளுக்கு முன் ஆறு மாத குழந்தையை வெறி நாய் கடித்தது. உரிய நேரத்தில் குழந்தை காப்பாற்றப்பட்டது. கடந்த வாரம் வெறி நாய் கடித்து ஒரு ஆடு பலியாகி இருந்தது. கட்டுமாவடி அருகே மேலகுடியி ருப்பைச் சேர்ந்த வேலு என்பவர், 13 ஆடு களை மூன்று நாட்களாக காணாமல் தேடி வந்தனர். இந்நிலையில் (புதன்கிழமை) ஓச்சக்குடி கிராமம் அருகே 13 ஆடுகளும் வெறி நாய்களால் கடிக்கப்பட்டு உடல்கள் சிதைந்த நிலையில் கிடந்தது. வெறிநாய்களால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நட வடிக்கை எடுத்து வெறிநாய்களை அப்பு றப்படுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அனைத்து தரப்பி னரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.