districts

img

திருச்சி ஆணழகன் போட்டியில் சிபிஎம் உறுப்பினர் மகன் பட்டம் வென்றார்

திருச்சிராப்பள்ளி, ஏப்.19-

   திருச்சி, மேலபுலிவார்டு ரோட்டில் நடைபெற்ற மிஸ்டர் திருச்சி ஆணழகன் போட்டியை அமைச்சர் கே. என்.நேரு தொடங்கி வைத் தார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க  பொதுச்செயலாளர் அரசு தலைமை வகித்தார். தலை வர் ராஜேந்திரகுமார் வர வேற்றார்.

   இந்த போட்டியில் திருச்சி  மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள் 100-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 50கிலோ  முதல் 85 கிலோ வரையி லான உடல் எடை பிரிவில் 9  போட்டிகள் நடைபெற்றது.

   இதில் 60 கிலோ எடை பிரி வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மலைக் கோட்டை பகுதிக்குழு உறுப் பினர் பஷீர்அஹமது மகன்  சாகுல்ஹமீது முதல் இடத்தை வென்றார். மேலும்  இவர் ஒட்டுமொத்த சாம்பி யன்ஷிப் பட்டத்தையும், மிஸ்டர் திருச்சி பட்டத்தை யும் வென்றார்.

   இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்து நடை பெறும் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.