சுதந்திர தின விழாவையொட்டி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்ததான கழகம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட துணைத் தலைவர் சந்துரு தலைமை வகித்தார். பொன்மலை பகுதி செயலாளர் கோபி, மாவட்டச் செயலாளர் சேதுபதி, சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், மணிமாறன், சிபிஎம் 35 வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.