districts

img

திருச்சி ஐஸ் ஸ்கேட்டிங் மாணவர்கள் தேசிய அணிக்கு தேர்வு

திருச்சிராப்பள்ளி, டிச.5-  இரண்டாவது தமிழ்நாடு ஐஸ் ஸ்கேட்டிங் கேம்ப் மற்றும் போட்டி, தில்லியில் நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை நடைபெற்றது.

இதில் திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்

. மாநில அளவிலான இப்போட்டியில் திருச்சிராப்பள்ளி சாய்ஜி அகாடமி மாணவர்களான விஜயபாஸ்கர் (12 வயதிற்குட்பட்டோர் பிரிவு), துருவன் ரெங்கம் (8 வயதிற்குட்பட்டோர் பிரிவு) ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்று மெடல்களும் சான்றிதழும் பெற்று தேசிய அணிக்குத் தேர்வானார்கள்.  திருச்சிராப்பள்ளி சாய்ஜி அகாடமி பயிற்சியாளர்கள் கோவிந்தராஜ், காயத்ரி, சிவா, திருநாவுக்கரசு மற்றும் பெற்றோர்கள் மாணவர்களைப் பாராட்டினர்.