districts

img

என்.பி.எஸ், யூ.பி.எஸ் பென்சன் திட்டங்களுக்கு எதிராக திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு

திருச்சிராப்பள்ளி, அக்.4 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள என்.பி.எஸ், யூ.பி.எஸ் பென்சன் திட்டங்களுக்கு எதிராக திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை எம்ப்ளாயிஸ் யூனியன் மற்றும் என்பிஎஸ் அசோசியேசன் சார்பில் உறுதிமொழி ஏற்கப் பட்டது. முன்னதாக, துப்பாக்கி தொழிற் சாலையில் மகாத்மா காந்தி உருவப்படத் திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு துப்பாக்கி தொழிற்சாலை எம்பி ளாயீஸ் யூனியன் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சீனி வாசலு, என்.பி.எஸ் அசோசியேஷன் தலை வர் கிருஷ்ணமூர்த்தி. செயலாளர் கேசவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.