districts

img

பேட்டரியை விழுங்கிய ஒரு வயது குழந்தை: அறுவை சிகிச்சையின்றி அகற்றம்

திருச்சிராப்பள்ளி, செப்.29 - பெரம்பலூர் மாவட்டம், குரும் பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது ஒரு வயது  பெண்குழந்தை, கடந்த செப்.21  அன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது,  விளையாட்டு பொம்மை களுக்கு பயன்படுத்தப்படும் வட்ட வடிவ பேட்டரி காயினை எடுத்து விழுங்கியுள்ளது. இதனால் மிகவும் சிரமப் பட்ட குழந்தையை பெற்றோர் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கடந்த செப்.22 அன்று கொண்டு வரப்பட்ட குழந்தையைப் பரி சோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே மூலம், பேட்டரி காயின்  இருக்கும் பகுதியைக் கண்ட றிந்தனர். குழந்தை விழுங்கிய பேட்டரி, தொண்டை வழியாக  உணவுக் குழாயில் தொங்கியிருந் தது. கீழே நுரையீரல் பகுதிக் குள் இறங்கும் முன்பாக, அதை  அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து குடல் அறுவை சிகிச்சை துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஆர்.ஆர்.கண்ணன், மருத்துவர்கள் சங்கர், ராஜசேகர், கார்த்தி கேயன், சுதாகர் ஆகியோர் அடங்கிய குழுவினர், குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து எண்டோஸ்கோபி முறையில் பேட்டரியை வெற்றி கரமாக அகற்றினர். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த குழந்தை தற்போது நல மாக உள்ளது. இதுகுறித்து சிகிச்சை யளித்த மருத்துவர் ஆர்.ஆர். கண்ணன் கூறுகையில், “ஒரு ரூபாய் நாணய வடிவில் இருந்த பேட்டரி மின்காந்த சக்தியுடன் இருந்தது. பயன்படுத்தி தூக்கி  எறியப்பட்ட பழைய பேட்டரி யாக இருந்தால், அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மின்காந்த சக்தியுடன் இருந்த பேட்டரியால் உணவுக் குழாயில் தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டு ஓட்டை விழும். மேலும்,  சிறுநீரகத்துக்கோ வேறு எந்த உறுப்புக்கோ சென்றிருந்தால் மிகவும் சிக்கலாகியிருக்கும். இதனால் எண்டோஸ்கோபி முறையில் பாதுகாப்பாக பேட்டரி அகற்றப்பட்டு, தற்போது குழந்தை நலமாக உள்ளது. வழக்கம்போல உணவு எடுத்துக்  கொள்வதுடன், இயல்பு நிலைக்கு  குழந்தை திரும்பியுள்ளது” என்றார். மருத்துவக் குழுவினரை டீன்  நேரு, மருத்துவமனை கண்கா ணிப்பாளர் அருண்ராஜ் ஆகி யோர் பாராட்டினர்.