districts

img

திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் சுமைப் பணி தொழிலாளர்களிடம் கருத்து கேட்க வலியுறுத்தி மனு

திருச்சிராப்பள்ளி, டிச.9 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் திங்க ளன்று நடந்தது. கூட்டத்தில் சிஐடியு திருச்சி ராப்பள்ளி மாவட்ட பாரம் சுமக்கும்  தொழிலாளர்கள் யூனியன் காந்தி மார்க்கெட் சங்கத் தலைவர் சின்ன துரை, செயலாளர் பிரபு ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ லெஷ்மியிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ்தான் காந்தி  மார்க்கெட் கடந்த 100 ஆண்டு களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. காந்தி மார்க்கெட்டில் சுமார் 500 கடைகள் உள்ளன. காந்தி  மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களி லிருந்தும், அண்டை மாநிலங்களி லிருந்தும் தினமும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் லாரிகள், வேன்கள் மூலம் வரும். இவற்றை இறக்குவதற்கும், ஏற்றுவதற்கும் என சுமார் 2500 சுமைப் பணி தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்களில் பட்டதாரிகள், பாலி டெக்னிக், ஐ.டி.ஐ, 12 ஆம் வகுப்பு  படித்தவர்கள் என 25 சதவீதம் பேர் உள்ளனர். தொழிலாளர்கள் அனைவரும் ஒவ்வொரு கடையிலும் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகிறார்கள். வியாபாரம் செய்து வரும் கடை  உரிமையாளர்கள் அவர்களுக் கென்று பல்வேறு சங்கங்களை வைத்துள்ளார்கள். அதுபோல் சுமை பணி தொழிலாளர்களும் தங்க ளுக்கென்று பல்வேறு சங்கங்களை வைத்துள்ளார்கள். எங்கள் சிஐடியு சங்கத்தில் சுமார் 600 சுமைப் பணி தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் மாநகரத்திலுள்ள காந்தி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது.

அவ்வாறு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமை யாளர்கள் சங்கம் மற்றும் தொழிலா ளர்கள் சங்கம், பல்வேறு போராட் டங்களை நடத்தி உள்ளது. இருப்பி னும் தமிழ்நாடு அரசு காந்தி மார்க்கெட்டை மதுரை ரோடு பஞ்சப்பூர் அருகே மாற்றுவதற்கு முடிவு செய்து அதனடிப்படையில் நட வடிக்கைகள் மேற்கொண்டு வருவ தாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இதையொட்டி மாவட்ட ஆட்சி யர், காந்தி மார்க்கெட்டிலுள்ள உரி மையாளர்களை அழைத்து ஆலோ சனை கூட்டம் நடத்தியதாக கூறப்படு கிறது.

ஆலோசனை கூட்டத்தில் உரிமையாளர்களுக்கு என்ன தேவை கள் என்பது குறித்து பரிசீலிக்கப் பட்டுள்ளது. ஆனால் காந்தி மார்க்கெட்டில் வேலை செய்யும் சுமைப்பணி தொழிலாளர்கள் நலன்  குறித்து இதுவரை மாவட்ட ஆட்சி யர் ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தவில்லை. தொழிலாளர்களின் வேலை  பாதுகாப்பு, வேலை உத்தரவாதம்  மற்றும் புதிதாக ஏற்பட உள்ள  மார்க்கெட்டில் தொழிலாளர்களுக் கான அடிப்படை வசதிகள் ஆகிய வற்றை மாவட்ட ஆட்சியர்  கவ னத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். காந்தி மார்க்கெட்டில் பணிபுரியும் தொழிலாளர் சங்க பிரதிநிதிகளை அழைத்து ஓர் ஆலோ சனை கூட்டம் நடத்துமாறு மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுவை கொடுத்த போது சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.