districts

img

திருச்சி காவேரி மருத்துவமனையில் 3 பேரின் துண்டிக்கப்பட்ட கைகள் இணைப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 16- திருச்சி காவேரி மருத்துவமனை ஒட்டுறுப்பு  அறுவை சிகிச்சை மற்றும் நுண் அறுவை  சிகிச்சைகளில் தனிச்சிறப்புடன் விளங்கு கிறது. இங்கு கடந்த ஒரு மாதத்திற்குள் தொடர்ச்சியாக மூன்று துண்டிக்கப்பட்ட கைகளை மறு இணைத்தல் (ரீ பிளான்டே ஷன்) எனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் கைகள் சிறப்பாக இயங்குகின்றன.

இந்த நவீன சிகிச்சை மனித முடியை விட மெல்லியதாக இருக்கும் தையல்களை  பயன்படுத்தி, சிறப்பு நுண்ணோக்கியின்கீழ் ரத்த நாளங்களை இணைத்து மேலும்  துண்டிக்கப்பட்ட எலும்புகள், தசைநாளங் கள் நரம்புகள் இணைக்கப்பட்டன.

இந்த சிகிச்சையை பிளாஸ்டிக் சர்ஜரி  நிபுணர் எஸ்.ஸ்கந்தா மற்றும் மருத்துவர்கள்  முரளிதாசன், சைலேஷ் ரமேஷ்பாபு, பயிற்சி  மருத்துவர்கள் ப்ரீத்தி வரதன், பிரதீப் ஆகி யோர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட னர். மேலும் மயக்க மருந்து குழு தலைவர்  மருத்துவர் கே.செந்தில் குமார் பங்கேற்றார்.

மேலும், காவேரி மருத்துவமனையில் தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தையொட்டி  இரண்டு தனித்துவமான சேவைகளான காவேரி லிம் பெடிமா கிளி னிக் மற்றும் மண்டல மறு இணைப்பு மைய  சேவைகளை தொடங்கியுள்ளதாக காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் டி.செங்குட்டுவன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒட்டு றுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் இரண்டு  பேர் 20 வயதுடைய இளைஞர் கள். மூன்றாவது நபர் 45 வய தானவர். இதில் இரண்டு பேரின்  கைகள் கொடூரமான தாக்குதல் களில் வெட்டு பெற்று உடம்பில்  இருந்து துண்டிக்கப்பட்டன. அதே நேரத்தில் கடைசி நோயாளி தனது கை உயர் அழுத்த ஹைட்ராலிக் பிரஸ்ஸில் சிக்கியதில்  நசுங்கிய நிலையில் மிகவும் மோசமாக  துண்டிக்கப்பட்டிருந்தது. சிறப்பாக பணி யாற்றிய மருத்துவர்களை பாராட்டுகிறேன்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தின ராக சென்னை ஐ.சி.ஏ.பி. எஸ்.சிம்ஸ்  மருத்துவமனையின் இயக்குநர் பேராசிரி யர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு,  கை மற்றும் நுண் அறுவை சிகிச்சை சேவை களின் மதிப்பு மற்றும் அது எவ்வாறு வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கிறது என்பது குறித்து பேசினார்.

லிம்பெடிமா கிளினிக் மூலம் யானைக்கால்  வியாதி மற்றும் அதன் சிக்கல்களால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் வீக்கம் குறைவ தற்கான சிகிச்சைகள் மற்றும் அதன் பாதிப்பு களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அறுவை சிகிச்சை வரையிலான அனைத்து வகையான விரிவான சிகிச்சைகளையும் வழங்கும்.

மண்டல மறு இணைப்பு சிறப்பு மையம்  மூலம் துண்டிக்கப்பட்ட பாகங்களை மீண்டும்  நுண் அறுவை சிகிச்சை மூலமாக இணைக் கும் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது.