districts

திருச்சி விரைவு செய்திகள்

நியாய விலைக் கடைகளில்  தரமான அரிசி வழங்கப்படுமா?

 தஞ்சாவூர், ஜூன் 3-  தரமான அரிசி வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தஞ்சாவூர் மாவட்டம் பூத லூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மாரனேரி நியாய  விலைக் கடை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வி.தொ.ச ஒன்றியத் தலை வர் எஸ்.மெய்யழகன் தலைமை வகித்தார். தமிழ் நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ஆர்.உதயகுமார் முன்னிலை வகித்தார். அரசு நியாயவிலைக் கடைகளில் அனைத்து  குடும்ப அட்டைதாரர்களுக் கும் 3 லிட்டர் மண்ணெண்ணெய்  வழங்க வேண்டும். அத்தியா வசியப் பொருட்களை தட்டுப் பாடின்றி வழங்க வேண்டும். உண்ணுவதற்கு ஏற்ற தர மான புழுங்கலரிசியை நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டும். மளிகை  பொருட்களை மலிவு விலை யில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


ராகேஷ் திகாயத்  மீது தாக்குதல்  கண்டன ஆர்ப்பாட்டம்

 தஞ்சாவூர், ஜூன் 3- ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங் களுக்கு எதிராக போராடிய  தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் மீது  திங்களன்று பெங்களூரு வில் தாக்குதல் நடத்தப்பட்ட தைக் கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தஞ்சாவூர் ரயில டியில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங் கிணைப்பாளர் என்.வி. கண்ணன் தலைமை வகித் தார். மக்கள் அதிகாரம் காளி யப்பன், சமவெளி விவசாயி கள் இயக்கம் சு.பழனிராஜன், தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர்கள் பி.செந்தில் குமார், வீரமோகன், தவிச மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஞான மாணிக்கம், சிஐ டியு மாவட்ட துணைச் செய லாளர் கே.அன்பு, தமிழ்நாடு  சிறுபான்மை மக்கள் நலக் குழு அப்துல் நசீர் மற்றும்  விவசாயிகள், சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.


விமானப் படையில் சேர வாய்ப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 3- இந்திய விமானப்படை யில் சேர விரும்பும் திருச்சி  மாவட்ட சேர விரும்பும் இளை ஞர்கள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சி யர் சிவராசு தெரிவித்துள் ளார்.  இதுதொடர்பாக அவர்  விடுத்துள்ள செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளதாவது:  இந்திய விமானப்படை பணிகளுக்கு ஐஏஎப் தேர்வு  ஒவ்வொரு ஆண்டும் நடத்தப் பட்டு வருகிறது. இத்தேர்வு 12-ஆம் வகுப்பு முடித்த கணிதம், இயற்பியல், ஆங்கில பாடங்களில் 50  சதவீதத்துக்கு மேல் மதிப் பெண் பெற்ற அல்லது மூன்று வருட பொறியியல் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் தகுதியுடையவர்கள்.  இந்திய விமானப் படையில் சேர விரும்பும் திருச்சி மாவட்ட சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் கூகுள் பார்மில் தங்கள் தக வல்களை உள்ளீடு செய்து பயனடையலாம்.


 

;