districts

img

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் உருவச் சிலைக்கு மரியாதை

தஞ்சாவூர், அக்.8 -  மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யா ணசுந்தரம் நினைவு நாளினையொட்டி அவரது உருவச் சிலைக்கு பட்டுக் கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கா. அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை யில் செய்தி மக்கள் தொடர்புத் துறை கட்டுப் பாட்டில் உள்ள மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத் தில், அவரது நினைவு நாளினையொட்டி, அவரது உருவச் சிலைக்கு பட்டுக் கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கா.அண் ணாதுரை, வருவாய் கோட்டாட்சியர் கு.சு.ஜெயஸ்ரீ, பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா ஆகியோர் மாலை  அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும்  உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நகராட்சி அலு வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.