districts

img

டெல்டா மாவட்டங்களில் அரசியலமைப்புச் சட்ட சிற்பி அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

நாகப்பட்டினம், ஏப்.14-  இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி, ஒரு மதச்சார்பற்ற ஜனநா யக சோசலிச குடியரசு சட்டம் உருவாவதற்கு அரும்பாடுபட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவ லராக செயல்பட்ட அண்ணல் அம்பேத்கரின் 134  ஆவது பிறந்த தினம் ஞாயிறன்று கொண்டா டப்பட்டது. இதையொட்டி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி பல்வேறு இயக்கங்கள் சார்பில் நடை பெற்றன. நாகப்பட்டினம் ஒன்றியம் குறிச்சி ஊராட்சி யில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சிபிஎம் சட்ட மன்ற குழு தலைவரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி மாலை அணி வித்து வீரவணக்கம் செலுத்தினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகை யன், நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியச் செயலா ளர் ஏ.வடிவேல், விச ஒன்றியத் தலைவர் எஸ்.என்.ஜீவாராமன், ஆலங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் என்.வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

திருவாரூர்

சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் பொதுவுடமை போராளி மக்கள் கவிஞர்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோ ரின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் முத்துப் பேட்டை குழு சார்பில் அவர்களது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முத்துப்பேட்டை நகரப் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் சி.செல்லதுரை தலைமையில் இந்நி கழ்ச்சி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், வாலிபர் சங்க நகரச் செயலாளர் சரவணன், விடு தலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் கண்ணதாசன், தமுஎகச மூத்த தோழர் ராஜ்மோ கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வலங்கைமான் ஒன்றியம், கொக்கலாடியில் சிபிஎம் மற்றும் வாலிபர் சங்கத்தின் சார்பாக அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.ராதா தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணி விக்கப்பட்டது. 

விசிக மரியாதை

திருவாரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மைய அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர்  உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. திருவாரூர் மைய  அமைப்பின் மாவட்டச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பொன்ன மராவதி பேருந்து நிலையம் எதிரில் விசிக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளர் தேவேந்திரன் தலைமை வகித்தார். சிபிஎம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர். 

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூத்த தோழர் எம்.ஜியாவுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் ஆகியோர் தலைமையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம் உள்ளிட் டோரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன் தலை மையில், மாநிலக்குழு உறுப்பினர் இரா.தனிக் கொடி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை, மறியல் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தஞ்சை மாவட்டக் குழுவின் சார்பில் நடைபெற்றது.  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பி னர்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச்  செயலாளர் என்.சிவகுரு, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்ட பாணி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு  மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர் மற்றும்  பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரசியல் சாசனச் சட்டத்தை பாதுகாப்போம் என உறுதி மொழி ஏற்கப்பட்டது.

பட்டுக்கோட்டை 

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆகியவை சார்பில், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மணிக்கூண்டு அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிலைக்கும், தமுஎகச கிளைச் செயலாளர் மோரிஸ் அண்ணாதுரை தலைமை யில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.  இதேபோல் பேருந்து நிலையத்தில் உள்ள  பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்கப் பட்டது. தொடர்ந்து, மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணி விக்கப்பட்டது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, தமுஎகச கிளைப் பொருளாளர் பக்கிரிசாமி, துணைச் செயலாளர் மருத்துவர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேராவூரணி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் உருவச்சிலைக்கு சிபிஎம், சிபிஐ, திமுக, மதிமுக, திராவிடர் கழகம்,  திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி களின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் மரியாதை

கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு, ஊர்வலமாக புறப்பட்டு சிஆர்சி முன்பு உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி விக்கும் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரும் சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவருமான அ.சவுந்தரராசன், சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், செயற்குழு  உறுப்பினர்கள், சிஐடியு மாவட்டத் தலைவர்  கண்ணன், மாநகரச் செயலாளர் செந்தில்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநகரச் செயலா ளர் பழ.அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள்  மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்ற னர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சியி னர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.