districts

img

மூத்த தோழர் எஸ்.சண்முகசுந்தரம் மறைவு

கரூர், அக்.17 - கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கரூர் மாவட்ட மூத்த தலைவர் தோழர் எஸ்.சண்முகசுந்தரம் உடல் நலக்குறைவு காரணமாக அக்.17 (வியாழன்) அன்று அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 71. கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் உள்ள மறவாபாளையம் கிரா மத்தில் சிறு விவசாய குடும்பத்தில் 15.09.1953 இல் பிறந்தவர் சண்முக சுந்தரம். தமிழ் இலக்கியம் பயின்ற இவர், கம்யூனிச கருத்துகளால் ஈர்க்கப் பட்டு 1978 ஆம் ஆண்டு சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி அமைப்பில் இணைந்து தனது அரசியல் பய ணத்தை துவக்கினார்.  அதைத் தொடர்ந்து இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அகில  இந்திய விவசாயிகள் சங்கம் என அவ ரது வெகுஜன அரங்கப் பணிகள் இருந்தன. விவசாயிகளின் கோரிக்கை களுக்காக பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர்.  புகளூர் ராஜவாய்க்காலில் திருப் பூர் சாயக்கழிவு நீர் கலப்பதால் விவசா யமே பாதிக்கப்பட்டது. அப்போது, அதற்கு எதிரான போராட்டத்தை தொ டர்ச்சியாக நடத்தி, புகளூர் ராஜ வாய்க்காலில் கழிவு நீர் கலக்காமல் செல்வதற்கான குகை வழிப்பாதை நொய்யல் ஆற்றில் அமைப்பதற்கு இவரது தலைமையில் நடைபெற்ற போ ராட்டங்களே காரணமாக இருந்தன. தீண்டாமை பிரச்சனைகள் தலை  தூக்கியபோது, அதற்கு எதிரான போ ராட்டங்களை நடத்தி இப்பகுதியில் நிலவிய தீண்டாமை கொடுமைகளை ஒழித்ததில் பெரும் பங்கு வகித்தவர்.  இலவச வீட்டுமனை, பட்டா, தொகுப்பு  வீடுகள், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காகவும் தொ டர்ச்சியான போராட்டங்களை மேற் கொண்டு ஏழை-எளிய மக்களுக்கு அந்த வசதிகள் கிடைக்க பெரிதும் உதவி யாக இருந்தார். இவர் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக, வட்டச் செயலாளராக, ஒன்றிய குழு  செயலாளராக திறம்பட பணியாற்றி யுள்ளார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றினார்.  இவரது மறைவு கட்சிக்கு  பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத் தாருக்கு ஆழ்ந்த இரங்க லையும், அனுதாபத்தையும் கட்சியின் கரூர் மாவட்டக்  குழு தெரிவித்துள்ளது. தலைவர்கள் அஞ்சலி  தோழர் சண்முகசுந்தரம் உடலுக்கு, தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர்  பெ.சண்முகம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை,  விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்  செயலாளர் சாமி.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, சிஐடியு மாவட்டத் தலை வர் ஜி.ஜீவானந்தம், கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. கந்தசாமி, சி.ராஜா முகமது, கே. சக்திவேல், சி.முருகேசன், மாவட்டக்  குழு உறுப்பினர்கள் எம்.ராஜேந்திரன், கே.சண்முகம், ஹோசிமின், விவசா யிகள் சங்க நாமக்கல் மாவட்டச் செய லாளர் பெருமாள், கரூர் ஒன்றியச் செய லாளர் பூரணம், கரூர் மாநகரச் செய லாளர் எம்.தண்டபாணி, பரமத்தி ஒன்றி யச் செயலாளர்கள் கந்தசாமி ஆகி யோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மறைந்த தோழர் சண்முக சுந்தரத்திற்கு மனைவி ரமணி, மகன் ஒருவர் உள்ளனர்.