districts

img

தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கருவூல அதிகாரி

அரியலூர், பிப்.16- அரியலூர் மாவட்ட கூடுதல் துணை கருவூல அதி காரியாக சுரேஷ் கண்ணன் பணி புரிந்து வருகிறார். இவர் செந்துறை அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையில் பேக் ஒன்று கிடப்பதை பார்த்து எடுத்துள்ளார். அதில், ரூ.52 ஆயிரம், ஸ்மார்ட் போன் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் இருந்துள்ளது. உடனடியாக அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் வந்து பேக்கை ஒப்படைத்தார். இதனையடுத்து பேக்கையின் உரிமையாளர் குழு மூர் கிராமம் வடக்கு தெரு மதியழகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு பின்னர் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப் துல்லா முன்னிலையில் சுரேஷ் கண்ணன் ஹேண்ட் பேக்கை மதியழகனிடம் ஒப்படைத்தார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் கண்ணனின் நற் செயலை பாராட்டி சால்வை அணிவித்தார்.