districts

img

சிஐடியு திருவாரூர் மாவட்டப் பொருளாளர் கே.ராஜேந்திரன்- இரா.மாலதி

சிஐடியு திருவாரூர் மாவட்டப் பொருளாளர் கே.ராஜேந்திரன்- இரா.மாலதி ஆகியோரது இல்ல திருமண வரவேற்பு விழா திருவாரூரில நடைபெற்றது. மணமக்கள் கே.ஆர். தென்றல்-எஸ்.சுதர்சனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சண்முகம், சிஐடியு தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆர்.சவுந்தரராஜன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை வி.பி.மாலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, மாவட்டச் செயலாளர் டி.முருகையன், எம்.ஜடாஹெலன் உட்பட ஏராளமானோர் வாழ்த்தினர். திருமண வரவேற்பு நிகழ்வில் மணமக்கள் சென்னையில் நடத்தப்படும் நிர்மல் பள்ளிக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினர்.