districts

img

போக்குவரத்து ஊழியர், ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், டிச.5-  போக்குவரத்துக் கழகங்களில் வரவுக் கும் - செலவுக்குமான வித்தியாசத் தொகையை  அரசே வழங்க வேண்டும். ஓய்வூதியர் களின் ஒப்பந்தப் பலன், அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். 1.4.2023 -க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு ஓய்வூதி யம் வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த் தையை உடனடியாக துவங்க வேண்டும் என்ற 6 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி,  போக்குவரத்து கழகங்களில் செயல்படும், அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கும்பகோ ணம், நாகை மண்டலங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அதனொரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட் டம் பேராவூரணி அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு டி.கே. ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மத்திய சங்க துணைச் செயலாளர் என்.நவ நீதன், சிஐடியு கிளை செயலாளர் ஜி.ரகு, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கரிகாலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில், ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண் டனர்.  நாகப்பட்டினம் அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நலச் சங்க கூட்ட மைப்புகளின் சார்பில், நாகப்பட்டினம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு டிச.19 வேலைநிறுத்த அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. நாகை மண்டல சம்மே ளன பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன், சிஐடியு சார்பில் சீனி.மணி, மத்திய சங்க துணைச் செயலாளர் ஆர்.சரவணன், பணிமனை தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.