districts

திருச்சி முக்கிய செய்திகள்

மண்டல தேர்தல்  அலுவலர்களுக்கு பயிற்சி 

திருவாரூர், மார்ச் 20 - தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக் கான பயிற்சி வகுப்பை செவ்வாயன்று, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்,  மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ  ஆகியோர் தலைமை வகித்து தொடங்கி வைத்தனர். வாக்குப் பதிவு மையங்களில் தேவையான அடிப்படை  வசதிகள், வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள், மாற்றுத்திற னாளி வாக்காளர்களுக்கான சாய்வுதளம் அளவு, வாக்குப்  பதிவு தொடங்குவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய மாதிரி வாக்குப் பதிவு போன்ற பல்வேறு தேர்தல் பணி கள் குறித்து மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி  அளிக்கப்பட்டது.  பின்னர், மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவ லர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மன்னார்குடி வருவாய் கோட்டாட் சியர் கீர்த்தனா மணி உடனிருந்தனர்.

கரூரில் ஆவணங்கள் இல்லாத ரூ.8.9 லட்சம் பறிமுதல்

கரூர், மார்ச் 20 - கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கரூர் மாவட்ட பகுதியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.8,09,350 பறிமுதல் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்தில் பறக்கும் படையினரும், நிலையாக  நின்று ஆய்வு செய்யும் குழுவினரும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புத னன்று கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஒரு  வாகனத்தில் ரூ.5,16,850, அரவக்குறிச்சி தொகுதிக்குட் பட்ட பகுதியில் ஒரு வாகனத்தில் ரூ.1,22,500, குளித்தலை  தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஒரு வாகனத்தில் ரூ.1,70,000 என 3 வாகனங்களில் மொத்தம் ரூ.8,09,350 பணம்  உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்றது கண்டறியப் பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

5.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூர், மார்ச் 20 - தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, புலவன் காட்டில் கூட்டுறவு சங்க சார்பதிவாளர் கவிதா தலை மையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற சரக்கு வேனை வழிமறித்து சோதனை  செய்தனர். அதில், பட்டுக்கோட்டை அருகே கொண்டிக் குளத்தில் உள்ள கோழிப் பண்ணைக்கு கொண்டு செல்லப் பட்ட 5,580 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டறியப் பட்டது. இதையடுத்து, லோடு வேன் ஓட்டுநரான தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (26), அவரு டன் வந்த சதீஷ்குமார் (29) ஆகிய இருவரையும் பிடித்து  காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் அரிசியை ஏற்றி விட்டது தெரியவந்தது. உணவு  பாதுகாப்பு துறை அலுவலர் முருகானந்தம் அரிசியை பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

உலக நன்மைக்காக பிரார்த்தனை

மயிலாடுதுறை, மார்ச் 20 - மயிலாடுதுறையில் சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக  திகழ்ந்து வரும் புனித பதுவை மற்றும் வனத்து அந்தோ ணியார் திருத்தல வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட புனித  லூர்து அன்னை கெபி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருத்தல பங்கு தந்தை ஜான் பிரிட்டோ அடி களார் தலைமை வகித்தார். மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார், லூர்து மாதா கெபி கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து, ஆலய வளாகத்தில் சிறப்பு திருப்பலியும், உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

திருச்சி தொகுதியில் ஒருவர் மனுத்தாக்கல்

திருச்சிராப்பள்ளி,  மார்ச் 20 - தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடை பெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பா ளருக்கான வேட்பு மனுத் தாக் கல் புதனன்று தொடங்கியது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடு வதற்காக ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் ராஜேந்திரன், திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  டிஜிட்டல் இந்தியாவில், வேட்பாளர்கள் பணம் செலுத்த டிஜிட்டல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி, இவர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய  வரும்போது, தன்னுடைய கழுத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை மாலையாக அணிந்து வந்து மனுத்  தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத் தேர்தல்  வேட்புமனுவை ஆன்-லைனில் பதிவு செய்ய ஏற்பாடு

மயிலாடுதுறை, மார்ச் 20 - 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணை யத்தின் அட்டவணைப்படி நடைபெற உள்ளது.  மயிலாடுதுறை நாடாளு மன்ற தொகுதியில் போட்டி யிட உள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக் களை மார்ச் 20 முதல் 27  வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை ஆன்- லைனில் பதிவு செய்தி டும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான இணையதளம் http://suvidha.eci.gov.in.  ஆனால் வேட்பு மனுவிற் கான கடைசி நாளுக்கு, முந்தைய நாள் வரை மட்டுமே ஆன்-லைனில் பதிவு செய்ய முடியும். ஆன்- லைனில் பதிவேற்றம் செய்யும் வசதியும், ஆன்-லைனில் டெபாசிட் தொகை செலுத்தும் வசதியும் ஏற்படுத் தப்பட்டுள்ளது.  எனினும் ஆன்-லைன்  வேட்புமனுவை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு, உரிய ஆவணங்களுடன் நேரில் வேட்பாளரோ, வேட்புமனுவை முன்மொழி பவரோ சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ நிர்ணயிக்கப்பட்ட உதவித் தேர்தல் அலுவலர் முன் பாக ஆன்-லைன் மனுவில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும்  நேரத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டி யது கட்டாயம். வேட்புமனுத் தாக்கல் செய்யும் நேரம் காலை 11  மணி முதல் மாலை 3 மணி வரை. காலை 11 மணிக்கு  முன்னரும் மாலை 3 மணிக்கு பின்னரும் வரப்பெறும் வேட்புமனுக்கள் கண்டிப் பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மயிலாடுதுறை நாடாளு மன்ற தொகுதிக்கு, மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல் தளத் தில் தேர்தல் நடத்தும் அலு வலர் மற்றும் மாவட்ட ஆட்சி யர் அல்லது நிர்ணயிக்கப் பட்ட உதவி தேர்தல் அலு வலரான தனித்துணை ஆட்சி யர் (ச.பா.தி) ஆகியோரி டம் வேட்பு மனுக்களை அளிக்கலாம் என மயிலாடு துறை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் அலு வலக செய்தி குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளி தலைமறைவு சமூக நலத்துறை விசாரணை

திருச்சிராப்பள்ளி, மார்ச் 20 - சிறுமியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய நபரை போலீசார் தேடி வரு கின்றனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது  சிறுமி ஒருவர், கடந்த மார்ச் 17 அன்று மாலை  தன் வீட்டருகே விளையாடி கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த சங்கிலி யாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த அவரது உற வினர் ஒருவர், சிறுமியை அருகில் இருந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியுள்ளார். இதில்  சிறுமிக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு உள்ளது.  இதையடுத்து சிறுமியை விடுவித்த  அந்த நபர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஆனால் இச்சம்பவம் குறித்து தெரியாத பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுமி  பூப்பெய்து விட்டதாக நினைத்து, அதற்கான  சடங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பின்னர் சிறுமியின் உடலில் நக கீறல்கள்  இருந்ததைப் பார்த்து அவரிடம் விசாரித்த னர். அப்போது, உறவினர் ஒருவர் சிறு மியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி யது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் போலீசில் புகார் அளித்து, சிறுமியை மருத்துவ மனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், சிறுமி பாலி யல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதியானது.  இது தொடர்பாக ஸ்ரீரங்கம் மகளிர் போலீ சார் வழக்குப் பதிந்து சிறுமியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய நபரை தேடி வருகின்றனர். மேலும், மகளிர் போலீசார் மற்றும் சமூக நலத்துறை, குழந்தைகள் நலப் பிரிவினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

தந்தை உயிரிழந்த சோகத்திலும்  தேர்வு எழுதிய பிளஸ் 1 மாணவி

ஒட்டன்சத்திரம், மார்ச் 20-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டி சேர்ந்த விவசாயி கருப்பு சாமி (42). இவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மகள் பிரியதர்ஷினி பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தனது  தந்தை இறந்த சோகத்திலும் மாணவி பிரியதர்ஷினி பள்ளிக்குச் சென்று பிளஸ் 1 உயிரியல் தேர்வு எழுதி னார். இது அவரது உறவினர்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

காப்பீட்டு ஆலோசகரிடம் ரூ.89.75 லட்சம் மோசடி செய்தவர் கைது

தேனி, மார்ச் 20-  தேனியைச் சேர்ந்த காப்பீட்டு ஆலோசகரிடம் இணைய வழி பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வ தற்காக ரூ.89 லட்சத்து 75 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு  மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்தவரை செவ்வாய்க் கிழமை, காவல்துறையினர் கைது செய்தனர். தேனி, வனச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்.  இவர், தேனியில் பாரத ஸ்டேட் வங்கி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் காப்பீட்டு ஆலோசகராக வேலை  செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2019- ஆம் ஆண்டு தேனி பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாள ராக பணியாற்றிய சுந்தரமூர்த்தி மற்றும் அவரது  நண்பர்கள் மூலம் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். செல்வராஜ் தான் சென்னை, பொழிச்சலூரில் தங்கி யிருந்து மேற்கு தாம்பரத்தில் இணைய வழி பங்கு  வர்த்தக அலுவலகம் நடத்தி வருவதாக கூறியுள்ளார். இணைய வழி பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால்,  முதலீட்டுத் தொகையில் 20 சதவீதம் லாபம் கிடைக்கும்  என்று செல்வராஜ் கூறியுள்ளார். இதை நம்பி பாஸ்கர் தனது பெயரிலும்,  தனது மனைவி செல்லம் சோபியா பெயரிலும் செல்வ ராஜின் நிறுவனத்தில் தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம்  ரூ.8 லட்சம் முதலீடு செய்துள்ளார். சில நாட்களில் பாஸ்கரி டம் அவரது முதலீட்டுக்கு ரூ.1.60 லட்சம் லாபம்  கிடைத்திருப்பதாக செல்வராஜ் கூறினார். முதலீட்டு தொகைக்கு அதிக லாபம் கிடைத்துள்ளதாக கூறியதால், பாஸ்கர் கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் 2020 செப்டம்பர் வரை தனது உறவினர்கள் மற்றும்  நண்பர்களிடம் கடன் பெற்று வங்கிக்கணக்கு மூலம்  செல்வராஜின் நிறுவனத்தில் மேலும் ரூ.81.75  லட்சம் முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் செல்வராஜ், பாஸ்கரின் முதலீடு  மற்றும் லாபத் தொகை ரூ.1 கோடிக்கு மேல் இருப்பதால், அவருக்கு முதலீடு மற்றும் லாபத் தொகையை 11 மாத  தவணைகளில் தருவதாக தெரிவித்து அதற்கான  ஒப்பந்தப் பத்திரத்தை கொடுத்திருந்தார். ஆனால், தற்போது செல்வராஜ் தனக்கு  முதலீட்டுத் தொகை மற்றும் லாபத்தை திரும்பத் தராமல் அலைக்கழிப்பதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் பாஸ்கர் புகார்  அளித்தார். இந்தப் புகாரின் மீது காவல் துறையி னர் வழக்கு பதிந்து, சென்னையில் செல்வராஜை கைது செய்து தேனிக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன்  கோயிலில் கொடை விழா

நாகர்கோவில், மார்ச் 20- மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில்  செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெற்றது.  குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில்  ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த  கோவிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 ஆம் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.  விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா். இதன் தொடா்ச்சியாக மாா்ச் 19 இல் கொடை  விழா நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு முக்கிய  இடங்களில் இருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட்டன.

தமிழக எல்லையில் பறக்கும் படையினர் வாகன சோதனை

தேனி, மார்ச் 20- தேனி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையான குமுளி மலைச்சாலை அருகே தேர்தல் பறக்கும் படை யினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக பறக்கும் படையினர் வாகன சோத னையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி இக்குழு செவ்வாயன்று தமிழக-கேரள  எல்லையான குமுளி மலைச்சாலை அருகே சோதனை யில் ஈடுபட்டது. பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் டி.குமார் தலைமையிலான குழுவினர் கேரளா செல்லும்  கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். கார் பதிவு எண், கேரளா செல்வதற்கான காரணம், மொபைல் எண் உள்ளிட்டவற்றை பதிவு  செய்து கொண்டனர். சுழற்சி முறையில் 24 மணிநேரமும்  வாகன சோதனை நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி கள் தெரிவித்தனர்.

அரசுப் பேருந்து மோதி  ஆட்டு வியாபாரி  பலி

விருதுநகர், மார்ச் 20- விருதுநகர் அருகே உள்ள மீசலூரைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (47). ஆடுகளை வாங்கி விற்பனை செய்யும்  தொழில் செய்து வந்தார். சிவகாசி சாலையில் உள்ள தனி யார் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார்.  அப்போது, சிவகாசி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து  மாரிச்சாமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்தி லேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, ஆமத்தூர்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் ராஜா என்பரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் கடத்திய 4 குழந்தைகள் மீட்பு : 2 பேர் கைது
 தனிப்படை போலீசாருக்கு ஐ.ஜி., டி.ஐ.ஜி. பாராட்டு

தூத்துக்குடி,மார்ச் 20- தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளை விற்பனைக்காக கடத்திய 2பேரை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மதுரை தென்மண்டல ஐஜி கண்ணன், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தூத்துக்குடி மாவட்டத்தில் திருச் செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.12.2022 அன்று இரண்டரை வயது குழந்தையும்,  குலசேகரன் பட்டினம் காவல் நிலை எல்லைக் குட்பட்ட பகுதியில் கடந்த 21.10.2023 அன்று  2 வயது குழந்தையும் மற்றும் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 09.03.2024 அன்று  4 மாத குழந்தையும் காணவில்லை என சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பெற்றோர்களால் புகார் அளிக்கப்பட்டது.  இதனையடுத்து உயர் அதிகாரி களின் அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்,  மேற்படி குழந்தைகளை கடத்திய வர்களை கண்டுபிடித்து, குழந்தை களை மீட்க பல்வேறு தனிப்படை கள் அமைத்து உத்தரவிட்டார்.  மேற்படி தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர். சந்தேக எதிரிக ளில் ஒருவரை தனிப்படை போலீ சார் கைது செய்து, விசாரித்தனர்.அப்போது, இக்குற்றத்தில் ஈடு பட்டவர்களான ஆலங்குளம், அண்ணாநகர் தெருவைச் சேர்ந்த  நாகப்பன் மகன் சாமி (எ) கருப்பசாமி (வயது 47) என்பதும் ஆலங்குளம் கரும்பனூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் (எ) ராஜா (வயது 53) என்பதும், அவர்கள் மேற்படி குழந்தைகள் உட்பட மொத்தம் 4 குழந்தைகளை கடத்தியதும், அவர்கள் இந்த குழந்தைகளை குழந்தையில்லாதவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி யதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து, இதுவரை புகார் அளிக்காத ஒரு குழந்தை உட்பட 4 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட 4  குழந்தைகளையும் ‘குழந்தைகள் நல குழு” (Child Welfare Committee) மூலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க இரவு, பகலாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீசாரை மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் மற்றும் மாவட்டட காவல் கண்கா ணிப்பாளர் எல். பாலாஜி சர வணன் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினர்.

சிபிஎம் ரசீது வழங்கும் விழா

சிபிஎம் ரசீது வழங்கும் விழா தஞ்சாவூர், மார்ச் 20-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் மாவட்டம்  திருவையாறு ஒன்றியம், கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும்  விழா, கட்சி நிதி வழங்கும் சிறப்பு பேரவை செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா  தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.