பாபநாசம், ஜூலை 31-
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை வட்டார ஒருங்கி ணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மாடித் தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி நடைபெற்றது.
அம்மாபேட்டை வட்டார தோட்டக் கலை அலுவலர் சிநேகப்ரியா, மாடித் தோட்டம் அமைத்தல் மற்றும் பரா மரித்தல் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பிரவீன், ராஜவேல் உட்பட கலந்துக் கொண்டனர்.
மேலும் மாடித் தோட்டம் தொகுப்பு ஒன்றின் விலை ரூ.900, மானியம் 50 சதவீதம் போக ரூ.450 மட்டும் செலுத்தி மாடித் தோட்ட தொகுப்பை பெற்றுக்கொள்ள லாம் என்றும், சந்தேகங்களுக்கு அம்மாபேட்டை வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்புக் கொள்ள லாம் என்றும், மாடித் தோட்ட தொகுப்பினை பெறு வதற்கு பதிவு செய்ய வேண்டிய இணையதள இணைப்பு https://tnhorticulture.tn.gov.in/kit_new/Kit_Registration எனவும் தெரிவிக்கப்பட்டது.