தொடர் திருட்டு: பொதுமக்கள் அச்சம்
பெரம்பலூர், டிச.7- பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெரம்பலூர் நகரம் உட்பட கிராமப் பகுதிகளிலும் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் எந்த நடவ டிக்கையையும் மாவட்ட நிர்வாகம் இதுவரை எடுக்க வில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பெரம்பலூர் அருகே சிறுகுடல் கிராமத்தில் பூட்டி இருந்த ஏழு வீடுகளை மர்ம நபர்கள் நோட்டமிட்டு, அந்த விடுகளின் பூட்டை உடைத்து ரூ.1,50,000 மதிப்பிலான நகை, பணம் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை திருடி உள்ளனர். மேலும் திருடர்கள் தங்கள் முகத்தை மறைத்து சர்வ சாதாரண மாக கிராமத்தில் உள்ள தெருக்களில் உலா வருகின்றனர்.
இச்சம்பவத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறை யும் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
விதை கிராம குழுவிற்கு பயிற்சி
பாபநாசம், டிச.7 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே குடிகாடு கிராமத்தில், தமிழ்நாடு நீர்வள, நிலவள, நவீன மயமாக்கல் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட விதை கிராம குழுவிற்கான பயிற்சி நடந்தது.
பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குநர் முகமது பாரூக் துவக்கி வைத்துப் பேசுகையில், தரமான விதை உற்பத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும், நெல், உளுந்து, எள் பயிர்களில் விதைப் பண்ணை அமைத்து, தரமான விதை உற்பத்தி செய்யும் முறை குறித்தும் எடுத்துரைத்தார். பாபநாசம் விதைச் சான்று அலுவலர் காயத்ரி விதைப் பண்ணை பதிவு, விதைப் பண்ணை வயல் ஆய்வு, அறுவடைக்குப் பின், பின்செய் நேர்த்தி முறை, சுத்திகரிப்பு பணிகள் குறித்து எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் எபினேசன் விதைப் பண்ணை அமைப்பதன் மூலம், குழு விவசாயிகளின் வருமானம் மேம்படும் என்றார். வேளாண்மை உதவி அலுவலர் திரிபுரசுந்தரி நன்றி கூறினார்.
துளிர் திறனறிவுத் தேர்வு
புதுக்கோட்டை, டிச.7 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றி யத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் திறனறிதல் போட்டிகள் நடை பெற்றன. நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார். அக்கச்சிப்பட்டியில் நடைபெற்ற தேர்வை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். முள்ளிக்காப்பட்டியில் நடைபெற்ற தேர்வை அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
டிஆர்இயு அங்கீகாரத் தேர்தல்
கும்பகோணத்தில் 89.4 சதவீத வாக்குப்பதிவு
கும்பகோணம், டிச.7 - ரயில்வே துறை தொழிலாளர் கோரிக்கைகள், துறை சார்ந்த விவ காரங்களை அரசு அதிகாரிகளுடன் அமர்ந்து பேசுவதற்கு 30 சதவீத வாக்குப் பெற்ற சங்கங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
அதனடிப்படையில், அதற்கான சங்க அங்கீகாரத் தேர்தல் திருச்சி கோட்டத்திற்குட்பட்ட 24 வாக்கு மையங்களில் கடந்த டிச.4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனநாயக முறைப்படி தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (சிஐடியு) சங்கமும் பங்குபெற்றது.
இதில், திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 17 ஆவது வாக்குச்சாவடி யான கும்பகோணத்தில் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. கும்பகோணத்தில் மொத்தம் 228 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த மூன்று நாட்களாக 203 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்த வாக்குப் பதிவில் கும்பகோணத்தில் மட்டும் 89.04 சதவிகித அடிப்படையில் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது. இதன் முடிவு கள் டிச.12 அன்று அறிவிக்கப்படும் என தெரிய வருகிறது.
கொடிநாள் விழா தொடக்கம்
புதுக்கோட்டை, டிச.7 - முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், கொடிநாள் விழா வினை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா சனிக்கிழமை துவக்கி வைத்து, கொடிநாள் நிதிவசூல் புரிந்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “7.12.2023 அன்று துவக்கிய படைவீரர் கொடிநாள் 2023-க்கான இலக்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அரசு ரூ.1,64,10,000 நிர்ணயித்தது. அதன்படி, மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலர்களின் முனைப்பான செயல்பாடுகள் காரணமாக அரசின் இலக்கைவிட கூடுதலாக, அதாவது 111.5 விழுக்காடு அளவிற்கு ரூ.1,82,95,133 நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றார்.