மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
தஞ்சாவூர், ஜூலை.31 - தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகே கீழவஸ்தாச்சாவடி கன்னித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் செல்வம் (28). இவர் உணவகம் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு முன் தனது வீட்டின் அருகே இரும்பு குழாய் பொருத்தி மின் இணைப்பு பெற்றுள்ளார். அதன் அருகில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருந்தது. இதில் குழந்தைகள் தவறி விழுவதால் அதை மூட முயற்சித்துள்ளார் செல்வம் . ஆனால் அந்த பள்ளத்தில் தண்ணீர் கசிந்து இருந்ததால் அதில் மின்கசிவு இருந்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அந்தப் பள்ளத்தை மூட செல்வம் முயற்சித்தபோது, அருகில் இருந்த மின்கம்பிகள் சென்ற இரும்பு கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மாருதிப்பட்டினத்தில் சிபிஎம் புதிய கிளை துவக்கம்
தஞ்சாவூர், ஜூலை31 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், விளங்குளம் ஊராட்சி மாருதிப்பட்டினத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிய கிளைத் துவக்க விழா, நாகூர் பிச்சை தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வீ.கருப்பையா, ஒன்றிய குழு உறுப்பினர் சகாபுதீன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிளைத் தோழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செந்தலைவயல் கடைவீதியில் நிதிநிலை அறிக்கை எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
பாபநாசம், ஜூலை 31- பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பாபநாசம் அடுத்த ராஜகிரியில் நடந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக், டாக்டர்கள் பொது மருத்துவம் கெளரி சங்கர், அறுவை சிகிச்சை நிபுணர் சந்திர குமார், மன நலம் பிரவீனா, ஜெகன், பிரிய தர்ஷினி, ஹரிணி, பிரித்திகா, பல் டாக்டர் ஓவியா, சித்தா டாக்டர் கனி மொழி, கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ் உட்பட பங்கேற்று ஏராளமான நோயாளிகளை பரிசோதித்தனர். இதில் நடமாடும் எக்ஸ்ரே மூலம் டிபி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஈசிஜி , இரத்தத்தில் சர்க்கரை அளவு, ஹீமோ குளோபின், கொழுப்பு, இரும்புச் சத்தின் அளவு, மார்பக புற்று நோய், வாய் புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்று நோய் பரிசோதனை மேற்க் கொள்ளப் பட்டது. இதில் ஊராட்சித் தலைவர் சமீமா பர்வீன், உறுப்பினர் முபாரக் உட்பட பங்கேற்றனர்.
கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறப்பு
பாபநாசம், ஜூலை 31- மேட்டூரில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறப்பு அறிவிப்பையடுத்து, கொள்ளிடம் கரையோர ஊராட்சியான கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடி, கூடலூர் கிராமங்க ளில், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வும், பாதுகாப்பும் அளிப்பது தொடர்பான ஆய்வு நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி சுதா, ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர், ஊராட்சிச் செயலர் முருகையன், ஓவர் சீயர் அரவிந்த் பங்கேற்று கொள்ளி டத்தை பார்வையிட்டு எடுக்க வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கை, மக்களிடம் ஒலிப் பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உட்பட ஆலோசிக்கப் பட்டது.
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்
அறந்தாங்கி ,ஜூலை 31- அறந்தாங்கி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அறந்தாங்கி வட்டார வள மையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் நடராஜன், அன்பழகன் மற்றும் ஆரோக்கியசாமி ஆகியோர் தலைமையேற்று தொடங்கி வைத்தனர். வட்டார வள மைய மேற்பார்வை யாளர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சியாமளா, நீலவேணி, உமா மகேஸ்வரி ஆகியோர் திட்டத்தின் சிறப்புகள் பற்றியும் கற்போருக்கு தேவையான அடிப்படைத் திறன்கள் வாசித்தல், எழுதுதல் மற்றும் எண்ணறிவு பற்றி கூறினார்கள். மேலும் கற்போர்கள் வங்கியில் பணம் போடுதல், எடுத்தல் ஏடிஎம் செயல்பாடுகளை கற்பித்தல் பற்றி கருத்தாளர்கள் விளக்கமாக கூறினார்கள். இத்திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் இரண்டாவது வாரம் வரை நடைபெறும். நவம்பர் இரண்டாவது வாரம் கற்போருக்கு தேர்வு நடைபெறும். புதிய பாரத எழுத்தறிவு திட்ட பயிற்சி மாநில ஒருங்கிணைப்பாளர் மாயழகு பார்வையிட்டு கற்போர்கள் தன்னார்வலர்கள் இடையே கலந்துரையாடல் நிகழ்த்தினார். புதுக்கோட்டை மாவட்ட புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பா ளர் விஸ்வநாதன் பயிற்சியின் கருத்துக்கள் வழங்கினார் .மையத்தில் உள்ள 1300 கற்போருக்கும் புதிய பாரத எழுத்தறிவு அடிப்படை நூல் வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் உமா மகேஸ்வரி செய்திருந்தார்.
கொள்ளிட ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அரியலூர், ஜூலை31- ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிட ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளான தென்கச்சி பெருமாள், நத்தம்,கீழக்குடிகாடு, மேலகுடிகாடு, அடிக்காமலை, அண்ணங்காரன் பேட்டை, கோடாலி கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனைத் தொடர்ந்து கல்லணையில் புதனன்று காலை உபரி நீரானது திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் வண்ணம் குளிக்கவோ, ஆடு மாடுகளை மேய்க்கவோ, செல்பி எடுக்கவோ, ஆற்றின் கரையை கடக்கவோ கூடாது என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம்
கும்பகோணம்,ஜூலை 31 - தஞ்சாவூர் விற்பனை க்குழு, கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்ப னைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். இதில் கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 2113 விவசாயிகள், 3000 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். ஏலத்தில் கும்பகோணம், செம்பனார் கோவில், பண்ருட்டி, விழுப்பு ரம், மகுடஞ் சாவடி,தேனி, விருதுநகர், கொங்கணாபுரம், தெலுங்கானா உள்ளிட்டப் பகுதிகளைச் சார்ந்த 15 வணி கர்கள் கலந்து கொண்டனர் பருத்தியின் மதிப்பு ரூ 2.09 கோடி. தனியார் வணிகர்கள் அதிகப் பட்சம் குவிண்டாலுக்கு ரூ.7235, குறைந்தப் பட்சம் ரூ.6679,சராசரி ரூ.6989 என விலை நிர்ணயம் செய்த னர்.
இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்வு
நாகப்பட்டினம், ஜூலை 31- இந்திய மாணவர் சங் கத்தின் மாவட்ட சிறப்பு பேர வை நாகப்பட்டினம் அரசு ஊழி யர் சங்க கூட்ட அரங்கில் நடை பெற்றது. நீட் தேர்வை எதிர்த்து நடைபெற்ற இப்பேரவைக் கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ப. சுபாஷ் சந்திர போஸ், தமுஎகச மாவட்ட செய லாளர் ஆதி. உதயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட தலை வராக எம்.ஜோதிபாசு.மாவட்ட செயலாளராக எம்.முகேஷ் கண்ணன் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில நிர்வாகிகள் ஏ. அமுல் கேஸ்ட்ரோ, ப.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னர்.