தேனி, நவ.28- வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்த மோடி அரசுக்கு எதிர்ப்பு வணிகர்கள் வருகிற 29 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். மோடி அரசின் ஜிஎஸ்டி வரி கொள்ளை யால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு பேரிடி விழுந்துள்ளது. வணிக பயன்பாட் டிற்கு வாடகைக்கு எடுத்துள்ள வணிகர்கள் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து 29 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த வணிகர்கள் முடிவு செய்துள்ளனர். தேனி மாவட்ட மொத்தம் மற்றும் சில் லரை வியாபாரிகள் சங்க மாவட்டத் தலை வர் எம்.எம்.ஆனந்தவேல், தேனி வியாபாரி கள் சங்கத் தலைவர் கே.எஸ்.கே.நடேசன் ஆகியோர் தலைமையில் வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கடை யடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது. போராட்டத்தில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்கம், தேனி வியா பாரிகள் சங்கம், ஹோட்டல் சங்கம், வைகை பருப்பு வியாபாரிகள் சங்கம், தனி மாவட்ட உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கம், சிறு பலசரக்கு வியாபாரிகள் சங்கம், அரிசி வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்பு கள் கடையடைப்பு போராட்டத்தில் பங் கேற்பதாக அறிவித்துள்ளனர்.