districts

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து தொழிற்சங்கங்கள் தெருமுனைப் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, நவ.19- ஒன்றிய பாஜக மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித் தும், விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த வேண்டும். தேசிய குறைந்தபட்ச  ஊதியம் மாதம் ரூ.26,000 என நிர்ண யம் செய்ய வேண்டும். திருத்திய தொழி லாளர் சட்டங்களை (4 சட்ட தொகுப்பு களை) திரும்பப் பெற வேண்டும். மின்சாரம் திருத்த சட்ட மசோதா 2022-ஐ  திரும்பப் பெற வேண்டும். முன்பணம் செலுத்தி மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின்படி ஆண்டுக்கு 200  நாட்கள் வேலை வழங்க வேண்டும். நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு விதை, உரம் மற்றும் மின்சாரத்திற் கான மானியத்தை அதிகப்படுத்த வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதை உறுதிப் படுத்தி, விவசாய உற்பத்திச் செலவைப்  போல் 50 சதவீதம் அதிக விலையும், குறைந்தபட்ச ஆதார விலையும் வழங்கிட சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும். பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்களை தனி யார் மயமாக்குவதை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை முற்றாக கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பெரும் பணக்காரர்களுக்கு சொத்து வரி விதிக்க வேண்டும். கார்ப்பரேட் வரியை அதிகப்படுத்த வேண்டும். கட்டு மானம் உள்ளிட்ட முறைசாரா தொழி லாளர்களை இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும். மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.  உணவு, மருந்து, இயந்திரங்கள் உட்பட அத்தியாவசிய பொருட் களுக்கான ஜிஎஸ்டி-ஐ நீக்க வேண்டும்.  பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை  நீக்கி, கலால் வரியை குறைத்து பெட்ரோலிய பொருட்களின் விலையை  குறைக்க வேண்டும். வேலை பெறும்  உரிமையை, அடிப்படை உரிமை யாக்க வேண்டும்.  மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்களில் லட்சக்கணக்கான காலி பணியிடங்களில் வேலை இல்லாத  இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயி கள் முன்னணி இணைந்து திருச்சி மாவட்டம் அரியமங்கலம், காட்டூர், திரு வெறும்பூர் பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடத்தின.  பிரச்சாரத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். எல்பிஎப் ஜோசப் நெல்சன், ஏஐடியுசி சுரேஷ், ஐஎன்டியுசி  வெங்கட் நாராயணன், எச்எம்எஸ் ஜான்சன், ஏஐசிசிடியு ஞானதேசிகன், எஸ்கேஎம் அயிலை சிவசூரியன் ஆகி யோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.