அரியலூர், ஆக.11 - பன்னாட்டு கம்பெனி முதலாளிகளுக்கான ஆதரவு கொள்கைகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர் விரோத 4 சட்டத்திருத்த தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். 3 புதிய குற்றவியல் நடைமுறை திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே, தொழிற்சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் த.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலர் ஆர்.மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் விஜயகுமார், எச்எம்எஸ் மாவட்டச் செயலர் ராமசுவாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.