தஞ்சாவூர், ஆக.6-
ஒன்றிய மோடி அரசின் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து, சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, எச்.எம்.எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், ஆக.9 வெள்ளையனே வெளியேறு தினத்தில் பெருந் திரள் அமர்வு போராட்டம் நடைபெற உள்ளது.
இதனை விளக்கி பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் எதிர்ப்புறம், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார் தலைமை யில் துண்டுப் பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.
சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, தென்னை விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் எம்.செல்வம், தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ரெ.ஞானசூரியன், ஐஎன்டியுசி ரவிச் சந்திரன், ஏஐடியுசி விஜயன், தொமுச ஆரோக்கியராஜ் ஆகி யோர் கலந்து கொண்டனர்.