districts

img

தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புக்கு எதிர்ப்பு தொழிற்சங்கங்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, செப்.24 - ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை இயற்றிய செப்.23 தினத்தை தொழி லாளர்களின் கருப்பு நாளாகக் கடைப் பிடித்து அனைத்துத் தொழிற்சங்கங் களின் சார்பில் திங்கள்கிழமை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தொமுச மாவட்டத் தலைவர்  அ.ரெத்தினம் தலைமை வகித்தார்.  செயலாளர் கி.கணபதி, சிஐடியு  மாவட்டத் தலைவர் க.முகமதலி ஜின்னா, ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் ப.ஜீவானந்தம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி தொமுச மாநில செயற்குழு உறுப்பினர் எம்.வேலுச்சாமி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் உ.அரசப்பன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பால சுப்பிரமணியன், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் எஸ்.சிவராஜ்  மற்றும் நிர்வா கிகள் பி.சண்முகம், எஸ்.அருள் ஞானசேகரன், சி.மாரிக்கண்ணு உள்ளிட் டோர் பேசினர். மின்வாரிய தொழிற்சங்க கூட்டுக் குழு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க  கூட்டுக்குழு சார்பில் செவ்வாயன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட் டம்  நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச திட்ட தலைவர் இளங்கோ தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொமுச திட்டச் செயலாளர் தியாகராஜன், சிஐ டியு திட்டத் தலைவர் நடராஜன், திட்டச்  செயலாளர் பழனியாண்டி, ஐக்கிய  சங்க செயலாளர் ஞானம் எம்ப்ளா யிஸ் ஃபெடரேசன் செயலாளர் சிவ செல்வம், சிஐடியு திட்ட பொருளாளர் இருதயராஜ் ஆகியோர் பேசினர். சிஐ டியு திட்ட துணைத் தலைவர் எஸ்.கே.செல்வராஜ் நன்றி கூறினார்.  பெரம்பலூர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலை யத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப் சங்கத்தின் மாவட்ட கவுன் சில் செயலாளர் ரெங்கசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின், ஏஐடி யுசி மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன்  ஆகியோர் கூட்டாக தலைமை வகித்த னர். எல்.பி.எப், சிஐடியு  நிர்வாகிகள், சிஐடியு எம்.ஆர்.எப் ஆலை தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். கரூர் கரூர் மின்வாரிய அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் சங்கத்தின் மாவட்டத் தலை வர் வி.ஆர்.அண்ணாவேலு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், எல்பிஎப் சங்க மாவட்டச் செயலாளர் பழ.அப்பசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், ஏசிசி டியு மாவட்டச் செயலாளர் எம்.பால் ராஜ், ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலா ளர் எஸ்.ஆனந்தராஜ், எல்எல்எப் மாவட்ட அமைப்பாளர் மா.சுடர்வள வன், விவசாயிகள் சங்க ஒருங்கி ணைப்பாளர் ஜி.ராஜசேகரன், எம்எல்எப்  மாவட்டச் செயலாளர் குணாளன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.