மயிலாடுதுறை, நவ.24- மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் உலக மரபு வார விழா சிறப்பு கருத்தரங்கம் வியாழனன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் கல்லூரி ‘வரலாற்று துறையும்’ இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு வரலாற்றுத் துறை தலைவர் முனைவர்.ஜூலியஸ் விஜய குமார் தலைமை வகித்து உரையாற்றினார். நாகை மாவட்ட தொல்லியல் அலுவலர் வசந்த குமார் ‘‘திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியில் நடைபெற்ற அகழாய்வும் அதன் வரலாற்று முக்கி யத்துவமும்’’ என்ற தலைப்பில் படக்காட்சியுடன் விளக்கி உரையாற்றினார். தமிழ் துறை தலைவர் முனைவர் பிரீட்டா ஜாஸ்மின், பேரா.செல்வராஜ் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். வரலாற்று துறை மற்றும் தமிழ் துறையை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.