districts

img

பூம்புகாரில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆய்வு

மயிலாடுதுறை, மார்ச் 5 - மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சுற்றுலா வளாகம் ரூ.23.60 கோடியில் மேம் படுத்தப்பட்டு வரு வதை சுற்றுலாத் துறை  அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் ஆய்வு செய்தார். முன்னதாக திருக்கடையூர் தமிழ்நாடு ஓட்டலில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் ராஜேந்தி ரன் தெரிவிக்கையில், “சுற்றுலாத் துறையில்  பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. திருக்கடையூர் ஓட்டல் தமிழ்நாடு கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டு இயங்கி வருகிறது. இதில் 11 குளிர் சாதன மற்றும் குளிர்சாதனம் இல்லாத அறை கள் செயல்பட்டு வருகின்றன. முழு நேர  உணவகம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. மேலும், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், அருகாமை யில் உள்ளதால் பக்தர்களின் வசதிக்கேற்ப ஓட்டல் தமிழ்நாடு இயங்கி வருகிறது.  பூம்புகார் சுற்றுலா வளாகமானது 17.04.1973 அன்று முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் கருணாநிதியால் தொடங்கி  வைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் சிலப்பதி கார கலைக்கூடம், பாவை மன்றம், இளஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம் மற்றும்  கொற்றப்பந்தல் ஆகியன அழகுற அமைந்து உள்ளன.  தற்போது, பூம்புகாரில் ரூ.23 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலாத் தலம் மேம்ப டுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சுற்றுச்சுவர், வாகனம் நிறுத்துமிடம், வருகை  பிளாசா-மூன்று எண்ணிக்கை, கழிப்பறை, பொருள் வைப்பறை, நுழைவுச்சீட்டு அறை,  தகவல் கூடம், பாரம்பரிய விளக்கு வசதி,  பிளம்மிங், கலை வேலைப்பாடு, சிலப்பதி கார கலைக்கூட புனரமைப்பு உள்ளிட்ட பணி கள் நடைபெற்று வருகின்றன” என்றார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி  சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஷ்வரி, சுற்றுலா வளர்ச்சி துறை மண்டல  மேலாளர் பிரபுதாஸ் உள்ளிட்ட அதிகாரி கள் பங்கேற்றனர்.