districts

நாளை திருவாரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்

திருவாரூர், மே 11-

    திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மே 13 அன்று  தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற வுள்ளது.

    மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் அனைத்து சிவில்,  ஜீவனாம்ச, மணமுறிவு மற்றும் மோட்டார் வாகன விபத்து  சம்பந்தப்பட்ட வழக்குகளிலும் சமரச முறையில் தீர்வு காணலாம். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றகளிலும் மே 13 அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

   எனவே, இவ்வாய்ப்பினை திருவாரூர் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு  நீதிபதி பாலமுருகன் (பொ) தெரிவித்துள்ளார்.