districts

இன்று மின் குறைதீர் கூட்டம்

கும்பகோணம், ஆக.9-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்ப கோணம் கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வைப் பொறியாளர் நளினி தலைமையில் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ளது.

     இந்த கூட்டத்தில் கும்பகோணம் நகரம்-புறநகர், பாப நாசம் நகர், புறநகர், கபிஸ்தலம், அய்யம்பேட்டை நகர்- புறநகர், திருக்கருக்காவூர், கணபதி அக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் பிரிவு  அலுவலகம் பகுதியினைச் சார்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு, மின் விநியோகம் தொடர்பாக ஏதேனும்  குறைகள் இருந்தால் தெரிவித்து பயன்பெறலாம் என  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்ப கோணம் கோட்டம் செயற்பொறியாளர் திருவேங்கடம் தெரிவித்துள்ளார்.