districts

இன்று பெருகமணியில் சித்த மருத்துவ முகாம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.19-

  திருச்சி மாவட்டம் பெருகமணி, அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் வியாழக் கிழமையன்று நடைபெறவுள்ளது. முகாமை, மாவட்ட  ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைக்கிறார்.  

  இதில், பெண்களுக்கான கருப்பை கட்டி, சினைப்பை  நீர்க்கட்டி, தைராய்டு, மகளிருக்கான இயற்கை பிரச்சனை கள், மூட்டுவலி, தோல்நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

  கோடை காலங்களில் ஏற்படும் நோய்களுக்கான அனைத்து வகை யான மருந்துகளும் வழங்கப்படும்.  முகாமில் மூலிகை கண்காட்சி மற்றும் சித்த மருந்துகள்  கண்காட்சியும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப் படுகிறது. மேலும் முகாமில் பங்கேற்போருக்கு நிலவேம்பு  குடிநீர் சூரணம், கபசுர குடிநீர் சூரணம் ஆகிய இலவச மாக வழங்கப்படும் என திருச்சி மாவட்ட சித்த மருத்துவ  அலுவலரும் மருந்து ஆய்வாளருமான எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.