districts

திருச்சி முக்கிய செய்திகள்

இன்று மின்நுகர்வோர்  குறைதீர் கூட்டம்

அறந்தாங்கி,  ஜூலை 17- புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி மின்வா ரிய அலுவலகத்தில் வியா ழன் (ஜூலை 18) அன்று  காலை 10:30 மணியள வில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதுக் கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் தலைமையில் நடைபெற உள்ளது. அச்சமயம் மின் நுகர் வோர்கள் கலந்து கொண்டு  தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு செயற் பொறியாளர் வெங்கட்ரா மன் கேட்டுக் கொண்டு உள்ளார்.

கண்புரை கண்டறியும் முகாம்

பாபநாசம்,  ஜூலை 17 - தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலர் கலை வாணி உத்தரவின் பேரில்  கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார  நிலையம் சார்பில் இலவச கண்புரை பரிந்துரை முகாம் நடைபெற்றது. இதில் கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ் 70 பேருக்கு கண் பரிசோ தனை மேற்க் கொண்டதில்  21 பேருக்கு கண்ணில் புரை இருப்பது கண்டறியப் பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ள, தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வட்டார மருத்துவ அலுவ லர் தீபக் உட்பட பங்கேற்ற னர்.

வாசிப்பு திறன் பயிற்சி 

தஞ்சாவூர்,  ஜூலை 17- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கிளை நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு வாசிப்பு திறன் பயிற்சி நடைபெற்றது. நூலக வாசகர் வட்டத் தலைவர் ந.மணிமுத்து தலைமை வகித்தார். நூலகர் ரெ. அண்ணாமலை வரவேற் றார். பல்வேறு நூல்களை மாணவ, மாணவியர் பங்கேற்று நூல்களை வாசித்தனர். இதில், நூல கர் ஜெயந்தி, ஆசிரியர்கள் மனோகரன், மயூரி உள்பட  பலர் கலந்து கொண்டனர்.  வாசகர் வட்ட துணைத் தலைவர் ஆர்.ஜோதிரா ஜன் நன்றி கூறினார்.

ரத்த தான முகாம்

பாபநாசம், ஜூலை 17- தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத் துவமனை, கிங் மேக்கர் வெல்பேர் பவுண்டேசன் இணைந்து 10 ஆம் ஆண்டு ரத்த தான முகாமை நடத்தின. 

பாபநாசம் வித்யா பாட  சாலையில் நடந்த முகா மில் 42 பேர் ரத்த தானம்  செய்தனர். இதில்  நகர் மன்ற உறுப்பினர் இராஜாராம் பாண்டியன்  கோபால், நேரு யுவகேந் திரா துணை இயக்குநர் திருநீலகண்டன், இந்தி யன் ரெட் கிராஸ் துணைத் தலைவர் ரோசாரியோ, பார்த்திபன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். ரத்த தானம் செய்தவர்கள், பங்கேற்றவர்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப் பட்டன.

அடிக்கல் நாட்டு விழா

தஞ்சாவூர், ஜூலை 17- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, ரூ.1 கோடியே 27 லட்சம்  மதிப்பீட்டில் ஆறு வகுப் பறைகள் கட்டிடம் கட்ட  அடிக்கல் நாட்டு விழா  செவ்வாயன்று நடை பெற்றது. இதனை பேராவூ ரணி எம்எல்ஏ நா.அசோக் குமார் துவக்கி வைத்தார். 

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் சங்க பேரவை

மயிலாடுதுறை, ஜூலை 17 - மயிலாடுதுறை மாவட்டம், பொறையாரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின்  செம்பை ஒன்றிய பேரவை நடைபெற்றது. 

கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சி.வள்ளி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பொ.சகிலாபானு துவக்கி வைத்து உரையாற்றினார். வேலையறிக்கையை ஒன்றிய செயலாளர் எஸ்.மகேஸ்வரி வாசித்தார். சிஐடியு  மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன் நிறைவுரையாற்றினார்.

புதிய தலைவராக சி.வள்ளி, செயலாளராக எஸ்.மகேஸ் வரி, பொருளாளராக பி.ஜெயசுதா உட்பட 35 பேர் கொண்ட  ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய செயலாளர் எஸ். மகேஸ்வரி நன்றி கூறினார்.

சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூர், ஜூலை 17 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட துறவிக்காடு கலைமகள் உதவி பெறும் நடுநிலைப்  பள்ளியில், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.7.5 லட்சம் மதிப்பீட் டில் காலை உணவு சமையல் கூடம் கட்டும் பணி, புனல்வாசல்  ஊராட்சி வாடிக்காடு முதல் இராமகிருஷ்ணாபுரம் இணைப்புச்  சாலை ரூ.60.80 லட்சம் மதிப்பிலும், பெரியநாயகிபுரம் ஊராட்சியில், எழில் நகர் சாலை மேம்பாடு பணி ரூ.40 லட்சத்தி லும், பூவாணம் ஊராட்சியில் ரூ.66.90 லட்சத்தில் புதிய சாலை  அமைத்தல் உள்ளிட்ட ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்  திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார்  தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

கேட்பாரற்றுக் கிடந்த நட்சத்திர ஆமைகள் வனத் துறையினரிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை, ஜூலை 17 - புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே கேட்பா ரற்றுக் கிடந்த நட்சத்திர ஆமைகளை செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத் தனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சாந்தனாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பை ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. அந்த பை அசைவதாக, புதுக் கோட்டை நகர காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது.  இதையடுத்து நகர காவல்துறையினர் சோதனை செய்த போது அதில் மருத்துவக் குணம் கொண்ட நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து அந்தப் பையை காவல் நிலை யத்திற்கு கொண்டு சென்று வனத்துறையுடன் இணைந்து சோதனை செய்ததில் அதில் 97 நட்சத்திர ஆமைகள் இருப்பது  தெரியவந்தது. மேலும் அதன் மதிப்பு சர்வதேச அளவில் 50  லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை காவல்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத் துறையினர் அதனை எடுத்துச் சென்று நாகை அல்லது கொல்லிமலை பகுதியில் விடப் போவதாக தெரிவித்தனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகையிலிருந்து வெளி நாட்டிற்கு கடத்த இருந்த நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வனத்துறையினருடன் இணைந்து காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

பழங்குடியின மக்களுக்கு குடிமனைப் பட்டா கேட்டு போராட்டம் நடத்த முடிவு

அரியலூர், ஜூலை 17- மீன்சுருட்டி அருகே நரசிங்கபாளையம் பழங்குடியின மக்களுக்கு குடிமனை பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு சிபிஎம் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்கப் போவதாக கிராம கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை  அடுத்த மீன்சுருட்டி அருகே நரசிங்கபாளை யத்தில் பழங்குடியின மக்களுக்கு குடியிருக் கும் இடத்திற்கு பட்டா கேட்டு கிராம கூட்டம்  நடைபெற்றது. கிராம தலைவர் கணேசன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எம்.இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், இலவச வீட்டு மனை பட்டா பெறு வதற்கான போராட்டத்தை ஆகஸ்ட் மாதம் நடத்துவது, அடிப்படை கோரிக்கைகளை வலி யுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப் பது என தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து நடை பெற்ற கூட்டத்தில், கோபாலகிருஷ்ணன் உட்பட 6 பேர் கொண்ட கிளை அமைக்கப்பட்டது.  எஸ்.டி கிளை சார்பாக தீக்கதிர் நாளிதழ் ஆண்டு  சந்தா ஒன்றும், நரசிங்கபாளையம் கிளை சார்பில்  ஒரு அரையாண்டு சந்தா, எக்ஸ்ரோடு பகுதியில் ஒரு அரையாண்டு சந்தா சேகரிக்கப்பட்டது.